அமெரிக்காவை நம்பி மோசம் போன லெஜன்ஸ்கி… மோடிக்கும் இதுதான் நடக்குமா..?

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு இந்த போரில் பல்வேறு வழிகளில் அமெரிக்க உதவியது. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா இருக்கிறது என்ற நம்பிக்கையில் தான் ரஷ்யாவுடன் தைரியமாக மோதினார் அதிபர் லெஜன்ஸ்கி. ஆனால், அமெரிக்காவில் நடந்த ஆட்சி மாற்றம் உக்ரைனுக்குச் சிக்கலாகிவிட்டது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் உக்ரைனுக்கு வழங்கும் உதவிகளை படிப்படியாக நிறுத்தத் […]
ஒரு உறைக்குள் மூன்று துப்பாக்கி..? விஜய்க்கு சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாதா..?

அரசியல் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவது கட்டாய நிகழ்வாகிவிட்டது. ஆனால், கட்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே ஜான் ஆரோக்கியசாமியின் வழிகாட்டுதல் விஜய்க்குத் தேவைப்பட்டது. அதன் பிறகு ஆதவ் அர்ஜூனா வந்தார். இப்போது பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து விஜய்யை முதல்வர் நாற்காலியில் அமரவைப்போம் என்று ஆதவ் பேசினார். இந்த நிலையில் ஒரு கட்சிக்கு ஒரு வியூக வகுப்பாளர் இருந்தால் சரியாக இருக்கும். மூணு பேர் இருந்தால் முக்காடு தான் போட வேண்டும். […]
ரேப்பிஸ்ட் தலைவர் சீமான்… இப்படி பொசுக்குன்னு பேசிட்டாரே

சீமான் வளர்ச்சியைப் பிடிக்காமல் ஸ்டாலின் அரசு வேண்டுமென்றே போலீஸாரை அனுப்பி மிரட்டிப் பார்க்கிறது என்று ஆவேசப்பட்ட ஆதரவாளர்களை எல்லாம் அதிர வைக்கும் அளவுக்கு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார் நாம் தமிழர் சீமான். தருமபுரியில் நாம் தமிழர் கட்சியினரின் கலந்தாய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், ” இது ஒரே வழக்கு, ஏற்கனவே காவல்துறையிடம் விளக்கம் அளித்துள்ளேன். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு மூன்று மாதம் காலம் அவகாசம் கொடுத்திருக்கு. அதற்குள் இவ்வளவு அவசரம் ஏன் […]
சீமானை கைவிட்ட ஆதரவு தலைவர்கள்… கைது நடவடிக்கை தீவிரம்..?

சீமான் வீட்டு காவலாளி அராஜகமாக கைது செய்யப்பட்ட நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவிப்பார்கள் என்று காத்திருந்த சீமான், அப்படி எதுவும் நடக்கவில்லை என்றதும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதனாலே, இன்று மாலை காவல் நிலையத்தில் ஆஜராக முடிவு எடுத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சீமான் மனைவி கயல்விழி செய்தியாளர்களிடம் இன்று, ‘சீமான் வீட்டில் இல்லாத நேரத்தில் சம்மன் ஒட்டப்பட்டது. அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவே கிழிக்கச் சொன்னேன்’ என்று […]
எக்மோர் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு. திமுக எம்எல்ஏ புதிய அப்ரோச்..!

எக்மோர் மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு. திமுக எம்எல்ஏ புதிய அப்ரோச்..! பெண்களுக்கு இலவச பஸ் பயணம், ,மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டு ஸ்டாலின் திட்டங்களும் பட்டிதொட்டி மக்கள் வரையிலும் போய் சேர்ந்துவிட்டது. ஆனால், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்டங்களை ஸ்டாலின் அறிவித்துக்கொண்டெ இருக்கிறார். இப்படி முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் திட்டங்கள் எல்லாமே தன்னுடைய எழும்பூர் தொகுதி மக்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்கிறதா..? என்ன என்ன […]
ஈஷாவில் அமித் ஷாவுக்கு தேர்தல் பிரசாரம்… வேலுமணியுடன் கூட்டணிக்கு அச்சாரம்..?

கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் அவரது ஈஷா யோகா மையத்தில் ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரி விழாவில் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இந்திய ஜனாதிபதி, பிரதமர் மோடி என்று திட்டமிட்டு மிகப்பெரிய விஐபிகளை அழைத்துவ்ருவது வழக்கம். அந்த வகையில் இந்த முறை ஸ்பெஷல் வி.ஐ.பி.யாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அவர்களுடன் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவகுமார், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. முக்கியப் புள்ளி எஸ்.பி வேலுமணி […]
பன்னீருக்கு அண்ணனாம் அண்ணாமலை. இப்படி ஒரு கொத்தடிமையா..?

மிஸ்டர் பணிவு என்று அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பணிவானவர் மட்டும் இல்லை அதற்கும் கீழே கொத்தடிமை மனப்பான்மை உள்ளவர் என்பதை தொலைக்காட்சி பேட்டியில் அவர் ஒப்புக்கொண்டதைக் கண்டு, அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைகிறார்கள். தனியார் தொலைக்காட்சிக்கு பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டியின் மூலம் அவருக்கும் தலைமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார். இப்போது பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு 41 வயது ஆகிறது. அதேநேரம், ஓ.பி.எஸ்ஸின் வயது 74. ஆனால் பேட்டியில் அண்ணன் அண்ணாமலை என்று சொல்கிறார். […]
முதல்வரும் விஜய் பிரதமரும் விஜய்… மாநாட்டில் பிரசாந்த் கிஷோருக்கு மாஸ்…

மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடந்துவருகிறது. இந்த மாநாட்டில் முதன்முறையாக மேடை ஏறிய பிரசாந்த் கிஷோருக்கு மாஸ் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு, அடுத்த ஆண்டு முதல்வர் ஆவார், அடுத்து இந்தியாவுக்கு பிரதமர் ஆவார் என்று அவரது ரசிகர்கள் தெறிக்க விடுகிறார்கள். இன்றைய கூட்டத்தில் கட்சித்தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோர், தேர்தல் பிரச்சார பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அழைப்பிதழ் கியில் வைத்திருந்த சுமார் […]
அரசியலுக்கு வருகிறாரா மிதுன்..? பா.ம.க. கல்யாணத்தில் ஆஜர்

எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் இதுவரை வெளிப்படையாக அரசியல் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கெடுப்பது இல்லை. திரைக்குப் பின்னே நின்று எடப்பாடி பழனிசாமியின் அரசியலை கட்டமைத்து வருகிறார். இந்த நிலையில் ஜி.கே.மணி இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக அவர் கலந்துகொண்டிருப்பது அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தனது இல்லத் திருமண விழாவையொட்டி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பத்திகை கொடுத்தார் ஜி.கே.மணி. இதையொட்டியே அன்புமணிக்கு எம்.பி. சீட் கேட்பதாக ஒரு பேச்சு கிளம்பியது. இந்த விழாவுக்கு […]
பிசிறு காளியம்மாளுக்கு தொடர்ந்து மிரட்டல் ..? சீமான் வீட்டுக்குப் பெட்ரோல் குண்டு

தன்னுடைய கட்சியில் இலையுதிர் காலம் என்று சீமானே ஒப்புக்கொள்ளும் அளவுக்கு அவரது கட்சி நிலவரம் இருந்துவருகிறது. நீண்ட காலமாக அமைதி காத்துவந்த காளியம்மாள் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். இன்றைய தினம் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் கட்சியில் இருந்து வெளியேறியிருக்கிறார். இந்நிலையில் காளியம்மாளை கன்னாபின்னாவென்று விமர்சனம் செய்துவருகிறார்கள் நாம் தமிழர் தம்பிகள். இந்நிலையில் சீமான் வீட்டுக்குப் பெட்ரோல் குண்டு போட முயன்றதாக சிலர் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கட்சியில் இருந்து வெளியேறி இருக்கும் காளியம்மாள் பற்றி நாம் […]

