சீமானுக்கு சிக்னல் கொடுத்தாரா அண்ணாமலை..? வைரலாகும் மீட்டிங்

சென்னை, திருவான்மியூரில் பாஜக நிர்வாகி மகள் ரிசப்ஷனுக்கு வந்த நாம் தமிழர் கட்சியின் சீமானும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் திடீரென சந்தித்துப் பேசிக்கொண்டது வைரலாகி வருகிறது. விழாவுக்கு வந்த சீமான் காரில் இருப்பது தெரியவந்ததும் அங்கு வரும் அண்ணாமலை, ‘’நலமா அண்ணா, ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க அண்ணா” என கை கொடுத்து பேசினார். இந்த விவகாரம் வைரலாவதை அடுத்து அண்ணாமலையிடம் கேட்கப்பட்டதும், ‘’சீமான் அண்ணனுக்கும் எனக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கு அரசியல் முரண் […]
நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டத்தை ஆரம்பிச்சுட்டாங்க… இதுக்குத்தான் டெல்லி போனாங்களா..?

தி.மு.க. எம்.பி.க்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என்று பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினமே தான் பேசிய பேச்சுக்கு தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்டுவிட்ட நிலையில், ஏன் அதே பிரச்னையை எழுப்பி கோஷம் போடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் எவ்வளவு முக்கியமான பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன. குறிப்பாக தமிழக மீனவர்கள் தொடர்ந்து […]
வேலுமணி வீட்டுக் கல்யாணத்தில் இபிஎஸ் அரசியல் மீட்டிங். செங்கோட்டையன் எங்கே..?

வேலுமணி மகன் கல்யாணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் கலந்துகொண்ட சூழலில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாமல் இருந்தது அரசியல் பஞ்சாயத்தாக கருதப்பட்டது. இந்த நிலையில் கோவை, அவினாசி சாலை, கொடிசியா வளாகத்தில் அமைந்துள்ள ஏபிசி ஹாலில் நடைபெற்ற, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். எடப்பாடி பழனிசாமியுடன் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக […]
ஏழைகள் தங்கத்தை சுருட்டும் ரிசர்வ் வங்கி..? குரல் கொடுக்கும் சீமான்

ஏழைகளின் வ்லி என்றால் என்னவென்றே தெரியாதவர்களே மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள். அதனால் தான், வெங்காயம் விலை ஏறுவது ஏன் என்று கேட்டால், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று நிதியமைச்சர் அறிவிப்பு செய்தார். இந்த நிலையில் ஏழைகளின் கையில் இருக்கும் கொஞ்சநஞ்ச தங்கத்தையும் சுருட்டும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. நகைக் கடன் மீட்டு திரும்ப வைக்கும் நடைமுறையில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்திருக்கும் மாற்றம் கடுமையான சிக்கலை உண்டாக்கும் என்று நாம் தமிழர் சீமான் முதல் நபராகக் குரல் […]
டாஸ்மாக் ரெய்டு ஓவர்… உதயநிதிக்கு சம்மன்..?

டெல்லியில் நடந்த மதுபானக் கொள்முதல் ஊழலால்தான் அரிந்த் கெஜ்ரிவால் சிறைக்குச் சென்று, முதல்வர் பதவியை இழந்து தற்போது ஆட்சியையும் இழந்திருக்கிறார். அதே வகையில் தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை அம்பலப்படுத்தவே டாஸ்மாக் அரசு அலுவலகத்திலும், மதுபான ஆலைகளிலும் 3 நாட்கள் ரெய்டு நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துக்குப் பணம் போயிருக்கிறதா என்று ஆய்வு நடப்பதால் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி மற்றும் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் நீடிப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான […]
ஸ்டாலினுக்குப் போட்டியாக இபிஎஸ் காணொளி மீட்டிங்… வேலுமணி ஆஜர்

எடப்பாடி பழனிசாமிக்கும் வேலுமணிக்கும் இடையில் உரசல் நடைபெறுவதாக ஒரு பேச்சு உலவி வரும் நிலையில், சென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று 82 கழக மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகள் இணையும் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. .இந்த கூட்டத்தில் வேலுமணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி மற்று வேலுமணி ஆகிய நான்கு பேர் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கழகச் செயலாலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு காணொளி […]
மீனவர் போராட்டத்துக்கு தயாராகும் விஜய்… தடுக்கும் அண்ணாமலை டீம்

மகளிர் தினத்துக்குப் போராடியவர்களை கைது செய்தவர்களை எதிர்த்து அறிக்கை விட்ட நடிகர் விஜய், அடுத்து நேரடியாக பிரமாண்ட போராட்டம் நடத்தப்போவதாக செய்திகள் வந்துள்ளன. எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாத மீனவர் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்க களம் இறங்குகிறாராம் விஜய். அதேநேரம், இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்த அண்ணாமலை டீம் தீவிர முயற்சி எடுத்துவருகிறது. காங்கிரஸ் காலத்திலிருந்து பா.ஜக. காலம் வரை யார் ஆட்சி செய்தாலும் தமிழக மீனவர்கள் பிரச்னை தீர்வதே இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் […]
பொய் சொல்லி மாட்டிக் கொண்ட அமித் ஷா… அண்ணாமலைக்கு வார்னிங்?

அமித்ஷா இரண்டு நாட்களில் தமிழகம் வருவார், அதன் பிறகு மிகப்பெரும் அரசியல் மாற்றம் நடைபெறும் என்று அண்ணாமலை அறிவிப்பு செய்திருந்தார். அதேபோன்று சி.ஐ.எஸ்.எஃப் 56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, தக்கோலம் பயிற்சி மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக தனி விமானம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அரக்கோணம் வந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) செயல்பட்டு வருகிறது. ராஜாதித்ய […]
கையெழுத்து போட்ட மாஜியை கட்டம் கட்டிய இபிஎஸ்… பா.ஜ.க.வுக்கு நாக் அவுட்

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பாக போராட்டம் நடத்திவரும் வேளையில் அ.தி.மு.க.வும் இருமொழிக் கொள்கை என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க.வினர் மும்மொழிக் கொள்கைக்கு மக்களிடம் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் பார்க்கும் நபர்களிடம் எல்லாம் கையெழுத்து வேட்டை நடத்திவருகிறார்கள். அந்த வகையில் மும்மொழி கொள்கைக்கு கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் ஆதரவு தெரிவித்து கையெழுத்துப் போட்டார். அப்போது அவர், ’’தி.மு.க. மொழியை வைத்து அரசியல் செய்கிறது. எனவே நான் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறேன்’’ […]
திரும்பவும் முதல்ல இருந்தா..? அமலாக்கத்துறை ரெய்டில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள்

தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருக்கிறார் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2022ம் ஆண்டு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் செந்தில் பாலாஜி அண்மையில் ஜாமீனில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்தவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்று ஒரு வழக்கு பதியப்பட்டு அதுவும் நடந்து வருகிறது. […]

