News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இஸ்லாமியர்கள் எச்சையா..? சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஓவர் பேச்சு

குஷ்பு பற்றி கன்னாபின்னாவென்று பேசி கட்சியிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இப்போது அவர் விஜய் தொப்பி அணிந்து நோன்பு திறந்த விவகாரத்தில்  இஸ்லாமியர்களைப் பற்றி கேவலமாகப் பேசி மாட்டியிருக்கிறார். இந்த விவகாரத்தை விஜய் கட்சியினர் கடுமையாக டிரோல் செய்துவருகிறார்கள். இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’விஜய் இஸ்லாமிய சகோதரர்களுடன் நோன்பு திறந்ததை தரம்தாழ்ந்து விமர்சித்ததோடு, உச்சமாக, இஸ்லாமிய சகோதரர்களை எச்சசோறு உண்பவர்கள் என்று வரம்புமீறிப் பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி போன்ற தரம்கெட்ட பேச்சாளர்களை வளர்த்தெடுக்கும் […]

செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கம்..? இபிஎஸ் சீரியஸ் ஆலோசனை

ரங்கராஜ் பாண்டேவின் சாணக்கியா ஆண்டு விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரதமர் மோடியை வானளவுக்குப் புகழ்ந்திருக்கிறார். அதோடு நான் தெளிவான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். வேடிக்கை மனிதரைப் போல் வீழ்ந்துவிட மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதையடுத்து செங்கோட்டையனை உடனடியாக கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். இது குறித்து பேசும் அ.தி.மு.க.வினர், ‘’செங்கோட்டையனுக்கு பாஜகவுக்கு போகும் திட்டம் இருந்தால் போக சொல்லுங்க. பொதுவெளியில் பேட்டி கொடுத்து கொண்டு […]

எப்போது செங்கோட்டையன் தர்மயுத்தம்..? சட்டமன்றத்தில் வெடித்த உட்கட்சி மோதல்

அண்ணா தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டயனுக்கும் நீண்ட நாட்களாகவே பனிப்போர் நடந்துவருகிறது. செங்கோட்டையன் மூலம் பா.ஜ.க. அரசியல் அதிரடி நிகழ்த்த இருப்பதாகவும் பா.ஜ.க. கூட்டணிக்கு வளைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக சட்டசபை நடந்துவரும் சூழலில் சபாநாயகர் அப்பாவுவை இரண்டாவது நாளாகவும் இன்று சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன். இதையடுத்து […]

பா.ஜ.க.வின் மூன்று அடிமைகள்… ஓட்டுக்காக தொப்பி நாடகம்

தி.மு.க.வுக்கு விழும் இஸ்லாமியர் ஓட்டுகளை எப்படியாவது வாங்கவேண்டும் என்பதற்காகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என்பதை சொல்லப்படுவதை உறுதி செய்வது போன்று ரம்ஜான் நோன்பு குடித்து ஒரு பரபரப்பைக் கிளப்பிவிட்டார். அதே பாணியில் பா.ஜ.க.வின் கைப்படியில் பொம்மையாக ஆடிக்கொண்டிருக்கும் மூன்று கொத்தடிமைகளும் ரம்ஜான் நாடகம் போட்டிருப்பது காமெடி வைரலாக மாறியிருக்கிறது. மூன்று முறை முதலமைச்சர் என்றாலும் பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன் என்று ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி அடித்தே விரட்டிவிட்டார். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் […]

10 கோடி ரூபாய் குப்பைக்குப் போயாச்சு. யார் ஐடியா சார் இது..?

இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இருக்கிறது. எல்லோருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. இந்த நிலையில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்புக்கு பணம் ஒதுக்கியது முட்டாள்தனமான யோசனை என்று அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு பட்ஜெட்டில் எக்கச்சக்க நல்ல திட்டங்கள் இருக்கிறது என்பதால், அதை மக்கள் நேரடியாகப் பார்க்க வேண்டும் என்பதற்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வகையில் […]

பிரிவினைவாதத்துக்கு ஆட்சிக் கலைப்பு..? ஸ்டாலினை மிரட்டும் நிர்மலா சீதாராமன்

இந்தியைத் திணிக்க முயலும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரூபாய்க்கான குறிபீட்டை ஸ்டாலின் நீக்கியிருப்பது தேச விரோதச் செயல் என்று மத்திய நிதியமைச்சர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நிர்மலா சீதாராமன், ‘’மாநில பட்ஜெட் ஆவணங்களில் ‘₹’ போன்ற தேசியச் சின்னத்தை நீக்குவது, அரசியலமைப்பின் கீழ் மக்கள் பிரதிநிதிகள் எடுக்கும் உறுதிமொழிக்கு எதிரானதாகும் பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. மொழி மற்றும் பிராந்திய பேரினவாதத்திற்கு உதாரணமாக […]

தமிழ்நாட்டுக்கு மானக்கேடு. குற்றவாளி யுவராஜை செருப்பால் அடிக்க வேண்டாமா..?

தமிழகத்தில் தலித்துகள் வாழவே முடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சாதி வெறியால் கொடூரமாக கோகுல்ராஜ் என்ற இளைஞனை கொலை செய்து ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜ் பரோலில் வெளிவந்த நேரத்தில், அவரை கல்லால் அடித்துக் கொல்லாமல் ஹீரோ போன்று வாழ்த்தி கொண்டாடியிருக்கிறார்கள். இது தான் பெரியார் கனவு கண்ட தமிழகமா..? நடப்பது சமூக நீதி ஆட்சியா? என்ற கேள்விகள் எழுகின்றன. எந்த ஒரு குற்றவாளி என்றாலும் சிறையில் இருந்து […]

அண்ணாமலைக்கு விஜயலட்சுமி செம ரெய்டு…. த்ரிஷா, குஷ்புக்கு மட்டும் ஏன் ஆதரவு

சமீபத்தில் நாம் தமிழர் சீமானை ஒரு திருமண விழாவில் சந்தித்த அண்ணாமலை, ‘ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்கண்ணா…’ என்று ஆதரவு கொடுத்தார். இந்த விவகாரத்திற்கு எதிரபாராத பக்கத்தில் இருந்து அண்ணாமலைக்கு செம அடி விழுந்திருக்கிறது. ஆம், சீமானை மட்டும் பொளந்துகட்டும் நடிகை விஜயலட்சுமி அண்ணாமலைக்கும் ஒரு கண்டன வீடியோ போட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ‘’அண்ணாமலை உங்கள் மீது எனக்கு ரொம்ப மரியாதை உள்ளது. உங்கள் நண்பர் சீமான் ஈழத்துக்காக போராடியோ அல்லது கச்சத்தீவை மீட்கப்போய் இந்த புகாரை வாங்கவில்லை. […]

தைரியமிருந்தால் சீமானை சீண்டிப் பாரு…. விஜய்யை வம்பிழுக்கும் தம்பிகள்

பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்டவர் விஜய். அதனாலே பெரியாரைப் பற்றி சீமான் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். சீமானின் பெரியார் வெறுப்புக்கு விஜய் ஒருபோதும் கண்டனம் தெரிவித்தது இல்லை. இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் பெரியாரைப் பற்றி கண்டனம் தெரிவித்ததும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பெரியார் பேச்சுக்கு விஜய், ‘’பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே? […]

ஜெயலலிதா 5 மாத கர்ப்பம்… தற்கொலை முயற்சி..? அ.தி.மு.க. அமைதி ஏன்..?

சமீபகாலமாக தி.மு.க. மேடையில் தென்படுபவர் குட்டி பத்மினி. பா.ஜ.க.வில் அவருக்குப் போதிய கவனிப்பு இல்லை என்றதும் தி.மு.க. பக்கம் திசை மாறி வந்திருக்கிறார். இப்போது ஜெயலலிதா 5 மாதம் கர்ப்பமாக இருந்தார் என்றும் தற்கொலை முடிவு செய்தார் என்றெல்லாம் பேசி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஜெயலலிதாவுக்கும் சோபன் பாபுக்கும் லிவிங் டுகெதர் ரிலேஷன்சிப் உண்டு என்பது தெரிந்த தகவல் என்றாலும் யாரும் வெளிப்படையாகப் பேசுவதில்லை. ஆனால், சாய் வித் சித்ராவில் குட்டி பத்மினி மிகவும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். […]