News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பல்லடத்தில் மோடி செம ஹேப்பி.. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை புகழ்ந்தது எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்காகவா..?

அண்ணாமலையின், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நிறைவையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஏராளமான மக்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தைப் பார்த்த மோடி ரொம்பவே மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். அதனாலே அண்ணாமலையின் முதுகில் தட்டி தன்னுடைய பாராட்டைத் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால்,  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. […]

சிவகுமார் இப்படி அட்டூழியம் செய்யலாமா..? வயதுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா..?

பொதுவெளியில் கம்பராமாயணம், திருக்குறள் போன்றவைகளைப் பேசி அப்ளாஸ் வாங்கும் நடிகர் சிவகுமார், அவ்வப்போது ஏடாகூட காரியங்களைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். முன்பு செல்ஃபி எடுக்க முன்வந்தவரின் செல்போனை தூக்கிப் போட்ட சிவகுமார் இப்போது பொன்னாடை போர்த்தவந்த முதியவரின் கையில் இருந்து அதை பறித்து தூர வீசியிருக்கிறார். இதை பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்துபோகிறார்கள். யோகா, தியானம், அன்பு, நேர்மை என்றெல்லாம் நிறையவே பேசும் சிவகுமார் இப்படி செய்யலாமா என்பது அத்தனை பேர் மனதிலும் கேள்வியாக எழுகிறது. படித்த […]

புதிய தலைமுறை கருத்துக்கணிப்பை விரட்டி விரட்டி அடிக்கும் எடப்பாடி டீம்

கடந்த முறை தி.மு.க.வில் சீட் வாங்கி ஜெயித்த பாரிவேந்தர் இப்போது பா.ஜ.க. பக்கம் நிற்கிறார். அதனாலோ என்னவோ அவர் சார்ந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு அ.தி.மு.க.வினரிடம் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு என்று தி.மு.க. கூட்டணிகளுக்கு 38.33 சதவிகிதமும் பா.ஜ.க.வுக்கு 18.48 சதவிகிதம் என்றும் அ.தி.மு.க.வுக்கு 17.26 சதவிகிதம் என்றும் நா.த.க.வுக்கு 7.26 சதவிகிதம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க. தவிர மற்ற கட்சியினருக்கு இதுவரை எந்த கூட்டணியும் உறுதி செய்யப்படவே இல்லை, […]

ரஜினிகாந்த், வைரமுத்து கருணாநிதி நினைவிடத்தில் என்ன சொன்னாங்க தெரியுமா..? வைரல் டாக்

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த கருணாநிதியின் நினைவிடத்தை சுற்றிலும் கலைஞரின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன. வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பிரமாண்டமாக பொறிக்கப்பட்டுள்ளது. இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் இந்த தோற்றம் இரவு நேரத்தில் ‘லேசர்’ மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ‘கலைஞர் உலகம்’ என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் உள்ளே நுழைந்ததும் கலைஞர் […]

அடேங்கப்பா, கருணாநிதி சதுக்கத்தில் இத்தனை ஹைடெக் அட்டகாசங்களா… பார்க்க மறந்துடாதீங்க…  

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த கருணாநிதி சதுக்கத்தில் புத்தம் புதிதாக ஏராளமான ஏற்பாடுகள் அட்டகாசமாக செய்யப்பட்டுள்ளன. அண்ணா சமாதியில், “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” எனப் பொறிக்கப்பட்டுள்ளது போன்று கருணாநிதி சமாதியில், “ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்” எனும் வாசகம் கலைஞரின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு கருணாநிதி அமர்ந்து எழுதும் வடிவிலான சிலை வடிக்கப்பட்டுள்ளது. கலைஞர் சதுக்கத்தின் முன்னே இருபுறமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழ்ச் செம்மொழி என ஒன்றிய அரசு ஏற்ற […]

கருணாநிதி நினைவிடம் திறந்துவைத்து ஸ்டாலின் நெகிழ்ச்சி… அண்ணாவுக்கும் மரியாதை

மெரினா கடற்கரையில் பிரமாண்டமான முறையில் கலைநயத்துடன் கட்டப்பட்ட அண்ணா, கலைஞரின் நினைவிடங்களை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து நெகிழ்ச்சி அடைந்தார். மெரினா கடற்கரையில் முதன்முதலாக அண்ணாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. தமிழினத் தலைவராக திகழ்ந்த அண்ணா 1969 பிப்.3ம் தேதி மறைந்த பின் அவருக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் மிகச் சிறந்த கட்டிடக் கலை வடிவமைப்புடன் கலைஞரால் நினைவிடம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வராக 19 ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்து, தமிழ்நாட்டை […]

புத்தம் புதிய பொலிவுடன் அண்ணா, கருணாநிதி சமாதி திறப்பு… ஹைடெக் அட்டகாசங்கள்

தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என அழைக்கப்படும் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, கடந்த இரண்டு வருடங்களாக அண்ணாவின் நினைவிடத்தை புதுப்பித்தும், கருணாநிதி நினைவிடமும் கட்டப்பட்டு வந்தன. தற்போது கட்டிட பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதையடுத்து இன்று மாலை 7 மணிக்கு அண்ணா, கருணாநிதியின் நினைவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்படவுள்ளது. சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய […]

தி.மு.க. தேர்தல் சீட் உத்தேசப் பட்டியல் வெளியீடு… டென்ஷனில் வைகோ, திருமா, காங்கிரஸ்

தி.மு.க.வுடன் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் உடன்பாடு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வின் உத்தேசப் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதையொட்டி தி.மு.க. கூட்டணியில் கடும் புகைச்சல் எழுந்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அரக்கோணம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாமக்கல், பொள்ளாச்சி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் […]

சசிகலா வீட்டுக்குப் போன ரஜினிகாந்த்..! என்ன பேசுனாங்கன்னு தெரியுமா..?

தான் ஆசைப்பட்ட மாதிரியே போயஸ் கார்டனுக்கு சசிகலா குடியேறிவிட்டார். இனிமேல் தன்னுடைய அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். இந்த நிலையில், இன்று சசிகலாவை ரஜினிகாந்த் குடும்பத்தோடு சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்கு எதிராக பிரம்மாண்டமான பங்களாவை கட்டி குடிபுகுந்துள்ளார் சசிகலா. இந்த பங்களா 24000 சதுர அடி கொண்டது. வேதா இல்லத்தை விட மிகப் பெரியது. தரைதளமும், அதற்கு மேல் இரண்டு தளங்களுமாக இந்த பங்களாக கட்டப்பட்டுள்ளது. இந்த […]

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா பெயரில் மெகாமோசடி… தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் மூலம் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கவர்ச்சிகரமான விளம்பரத்தை சமூகவலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த வங்கிப் பணத்தையும் ஒரு கும்பல் கொள்ளை அடிப்பதாக பெருநகர சென்னை காவல்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது. ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இந்திய குடிமகன் ஒவ்வொரு நபரும் 5,000 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதில் பிரதமர் மோடியின் படத்தையும் மோசடியாளர்கள் இடம் பெறச் செய்வதால் மக்கள் நம்பிக்கையுடன் அந்த விளம்பரத்தை […]