Share via:
பொதுவெளியில் கம்பராமாயணம், திருக்குறள் போன்றவைகளைப் பேசி அப்ளாஸ்
வாங்கும் நடிகர் சிவகுமார், அவ்வப்போது ஏடாகூட காரியங்களைச் செய்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.
முன்பு செல்ஃபி எடுக்க முன்வந்தவரின் செல்போனை தூக்கிப் போட்ட
சிவகுமார் இப்போது பொன்னாடை போர்த்தவந்த முதியவரின் கையில் இருந்து அதை பறித்து தூர
வீசியிருக்கிறார். இதை பார்த்த அத்தனை பேரும் அதிர்ந்துபோகிறார்கள்.
யோகா, தியானம், அன்பு, நேர்மை என்றெல்லாம் நிறையவே பேசும் சிவகுமார்
இப்படி செய்யலாமா என்பது அத்தனை பேர் மனதிலும் கேள்வியாக எழுகிறது. படித்த நூல்களும்,
உரையாற்றிய மேடைகளும், எழுதிய புத்தகங்களும் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் நிதானத்தையும்,
சக மனிதன் மேல் கொஞ்சம் கரிசனத்தையும் காட்டக் கத்துக்குடுத்துருக்கலாம் என்று கோபமாக
பேசுகிறார்கள்.
சிவகுமார் இனியாவது தன்னை மாற்றிக்கொள்வாரா..?