Share via:
தான் ஆசைப்பட்ட மாதிரியே போயஸ் கார்டனுக்கு சசிகலா குடியேறிவிட்டார்.
இனிமேல் தன்னுடைய அரசியல் வாழ்வு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். இந்த
நிலையில், இன்று சசிகலாவை ரஜினிகாந்த் குடும்பத்தோடு சென்று சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்துக்கு எதிராக பிரம்மாண்டமான பங்களாவை
கட்டி குடிபுகுந்துள்ளார் சசிகலா. இந்த பங்களா 24000 சதுர அடி கொண்டது. வேதா இல்லத்தை
விட மிகப் பெரியது. தரைதளமும், அதற்கு மேல் இரண்டு தளங்களுமாக இந்த பங்களாக கட்டப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் ஒரே நேரத்தில் 10 கார்களை நிறுத்த முடியும். போயஸ் கார்டன் வேதா இல்லத்திற்கு
குடிசென்ற பிறகு தான் அரசியல் களத்தில் கோலோச்சினார் ஜெயலலிதா. அப்படி சசிகலாவும் போயஸ்
கார்டனில் குடிபெயர்ந்துள்ளதால் சசிகலாவும் தனது அரசியலை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள்
கூறுகின்றனர்.
இந்நிலையில், சசிகலாவின் இந்த புதிய பங்களாவுக்கு நடிகர் ரஜினிகாந்த்
இன்று வருகை தந்தார். ரஜினியை வரவேற்ற சசிகலா, அவருடன் நீண்டநேரம் உரையாடினார்.
இதுகுறித்து ரஜினியிடம் கேட்டபோது, ‘’சசிகலா இந்த வீட்டை கோயில்
மாதிரி கட்டியிருக்கிறார். இங்கு அவர் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்
என வேண்டிக் கொள்கிறேன். அரசியல் பற்றி பேச
விரும்பவில்லை…” என்று முடித்துக்கொண்டார்.
பக்கத்து வீட்டுக்காரங்கன்னு பாசத்துல சினிமாவைப் பத்தி மட்டும்
பேசியிருப்பாருன்னு நினைச்சுக்குவோம்.