Share via:
விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஜோடி திடீரென்று எல்லை மீறி நடந்து கொண்ட சம்பவம் புகைப்படமாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூகவலைதளங்களில் தினந்தோறும் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேநேரம் இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். ஒரு சில பதிவுகள் மக்கள் மத்தியில் முகசுளிப்பை ஏற்படுத்தும்.
அந்தவகையில் எக்ஸ் வாடிக்கையாளர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது இணையவாசிகளை அதிரச் செய்துள்ள பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.
விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் அங்குள்ள சில அடிப்படை விதிமுறைகளை கடைபிடிப்பது வழக்கம். ஒரு சிலர் அத்துமீறும் போது விமான ஊழியர்கள் அவர்களுக்கு எச்சரிக்கைவிடுப்பதும் மீண்டும் மீறினால் நடவடிக்கை எடுப்பதும் வழக்கம்தான்.
விமான இருக்கையில் 2 பேர் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டு பல்வேறு சேட்டைகளை செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பயனர், விமானத்தில் என் பார்வையை என்னாலே நம்ப முடியவில்லை. மொத்தம் 4 மணிநேரம் அவர்கள் இப்படித்தான் இருந்தார்கள் என்று சில புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார்.
இந்த பதிவானது 21 மில்லியன் பார்வையாளர்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது. அதில் ஒரு பயனர், விமானப்பணிப்பெண் எதுவும் சொல்லவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றுமொரு பயனர் ஒருவேளை விஐபி கஸ்டமராக இருப்பார்களோ என்னமோ என்று கிண்டலுடன் பதிவிட்டுள்ளார்.