News

Follow Us

தமிழகம், புதுவை உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சுமார் 7 மணியளவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு செய்தார். ஆனால், இன்று காலையில் அறிவிக்கப்பட்ட வகையில் தமிழகத்தில் வாக்குப் பதிவு சதவிகிதம் : 69.5% ஆகும்.

தமிழகத்தில் அதிகம் வாக்குப் பதிவான 5 தொகுதிகள்:

1. தரும்புரி – 81.5

2. கள்ளக்குறிச்சி – 79.2

3. கரூர் – 78.6

4. நாமக்கல் – 78.2

5. சேலம் – 78.1

தமிழகத்தில் குறைவாக வாக்குப் பதிவான 5 தொகுதிகள்:

1. ஶ்ரீபெரும்புதூர் – 60.2

2. வட சென்னை – 60.1

3. தூத்துக்குடி – 60.0

4. தென் சென்னை – 54.3

5. மத்திய சென்னை – 54

வெயிலின் தாக்கம் காரணமாகவே கடந்த 2019 தேர்தலை விட சுமார் 3 சதவிகிதம் குறைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், தி.மு.க. கூட்டணியுடன் அ.தி.மு.க. கூட்டணி கடுமையாகப் போட்டியிட்ட தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், சேலத்தில் மட்டும் வாக்குப்பதிவு அதிகமாக இருந்துள்ளது.

கண்டிப்பாக தி.மு.க. ஜெயித்துவிடும் என்ற நிலையில் இருந்த ஸ்ரீபெரும்புதூர், வடசென்னை, தூத்துக்குடி, தென் சென்னை, மத்திய சென்னையில் வாக்குபதிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. புதிய வாக்காளர்களும் முதிய வாக்காளர்களும் குறைவாகவே வாக்களித்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த தேர்தலில் வாக்களித்த நடிகர் விஜய், ‘நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

‘’எங்க கட்சி போட்டி போடல, அதனால நாங்க யாரும் ஓட்டுப் போடப் போகல. அதனால்தான் வாக்கு சதவிகிதம் குறைஞ்சு போச்சு’ என்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் தொடர்ந்து பதிவு போட்டு வருகிறார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link