News

Follow Us

அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து முக்கியப் புள்ளிகள் எல்லாம் போயஸ் தோட்டத்து வாசலில் காத்துக்கிடந்தது ஒரு காலம். இப்போது மன்சூர் அலிகானுடன் கூட்டணி பேசும் அளவுக்கு கட்சி நிலைமை மாறியிருக்கிறது.

ராமதாஸ் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தே கூட்டணிப் பேச்சுவார்த்தையை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். ஆனால், பா.ஜ.க.வும் பெரிய ஆஃபர் கொடுப்பதால் அன்புமணி அந்தப் பக்கம் செல்வதற்கே ஆர்வம் காட்டுகிறார்.

பிரேமலதாவை கடந்த தேர்தலில் கேட்டுக்குப் பக்கத்தில் வரவிடாமல் விரட்டியடித்தார்கள். எனவே, அவரும் பா.ஜ.க.வுடனே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகிறார். பா.ஜ.க.வில் சரியான கவனிப்பு இல்லை என்றால் மட்டுமே அ.தி.மு.க. என்ற முடிவில் இருக்கிறார்.

ஜி.கே.வாசன், சரத்குமார், கிருஷ்ண்சாமி, ஏ.சி.சண்முகம் போன்ற உதிரிக் கட்சிகளும் பா.ஜ.க. பக்கம் போய்விட்டன. ஆகவே, இப்போதைக்கு வேறு வழியில்லாமல் இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கியிருக்கும் நடிகர் மன்சூர் அலிகானை அழைத்து கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள்.

அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டர்கள் நெஞ்சை பிடித்துக்கொண்டு இந்த காட்சியைப் பார்க்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link