Share via:
தேனி தொகுதியில் தினகரனுக்கு அண்ணாமலை செய்த பிரசாரம் கடும் பின்விளைவு
கொடுத்துள்ளது. தேனியில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்காகப் பேசிய அண்ணாமலை, ‘ஏற்கனவே
தேனி பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகள் மூலம் பெரிதும் பயனடைந்த தேனி பொதுமக்கள்,
மீண்டும் அண்ணன் அவர்களையே பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர்.
தமிழகத்தில் வெறும் 21 இடங்களில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின்,
இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கூறுகிறார். திமுக காங்கிரஸ் கூட்டணியிடம் இருந்து,
தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
தினகரன் வெற்றி பெற்றால் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. காணாமல்
போய்விடும் என்பது அவருக்குத் தெரியும். அதனால், அதிமுக திமுக இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும்
அண்ணனுக்கு எதிராக கூட்டு சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், உண்மையான அதிமுக தொண்டர்கள்
அனைவரும் தினகரன் பக்கம்தான் என்பதை, ஜூன் 4 அன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் உறுதி
செய்யும்…’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுப்பது போன்று எடப்பாடி பழனிசாமி, ‘தேர்தலுக்குப்
பிறகு அண்ணாமலை காணாமல் போய்விடுவார்’ என்று கூறினார். அவரது ஐ.டி. டீம் ஆட்கள் ஜூன்
4ம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக பதவி ஏற்பது வானதி சீனிவாசனா அல்லது தமிழிசை செளந்தர்ராஜனா
என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் அண்ணாமலை பேச்சுக்கு வேதனை தெரிவித்திருக்கிறார்.
‘கட்சியை எனக்கு வாங்கித்தர்றதா சொல்லிட்டு தினகரனுக்குக் கொடுக்கப் பார்க்கிறாங்க’
என்று தனிமையில் அழுகிறாராம்.
அ.தி.மு.க.வுக்கு வந்த சோதனை