Share via:
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. அதைத்தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சித் தலைமை, வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர் என அனைத்து தரப்பினரும் வாக்கு சேகரிப்பதில் முழு வீச்சுடல் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
நிலக்கோட்டை பகுதியில் மக்கள் முன்பு கருணாஸ் பேசும்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என்று பிரதமர் மோடி இந்திய மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அது எப்போதும் நடக்காது.
மேலும் செய்யும் விதமாக படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பா.ஜ.க. கட்சியின் சின்னமான தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்று கிண்டலா பேசினார். அப்போது கூட்டத்தினர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. மேலும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் மக்கள் அனுமதிக்கக் கூடாது என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் உலகில் அதிகம் பொய் பேசுபவர்கள் என்று போட்டி வைத்தால் அதில் முதல் இடத்தை பிரதமர் மோடி பிடிப்பார். அதே போட்டிக்கான 2வது இடத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிடிப்பார். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் எக்கச்சக்கம் என்று பா.ஜ.க.வை கிண்டல் செய்து மக்களை சிரிக்க வைத்து வாக்கு சேகரித்தார்.
மேலும் கருணாஸ் அப்பகுதியில் உள்ள பள்ளப்பட்டி, அணைப்பட்டி, விறுவீடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டினார்.