Share via:
சீமானின் நாம் தமிழர் கட்சியின் சின்னமான ஒலிவாங்கிக்கு அறிமுகக்
கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, ஒலிவாங்கி எனும் மைக் சின்னத்தையும் தேர்தல் அறிக்கையும்
வெளியிட்டார் சீமான்.
அந்த நேரத்தில் விருதுநகர் வேட்பாளருக்கு தமிழ் தெரியவில்லை என்று
கேள்வி கேட்டதும் உடனே ஆவேசமானார். அந்த தம்பி ஓமனில் படித்தவர் என்பதால் தமிழ் தெரியவில்லை.
அதற்கு இந்த நாடுதான் அவமானப்பட வேண்டும் என்றார்.
அதோடு நில்லாமல், என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேரும் ஆங்கில வழி
பள்ளியில் படிக்கிறார்கள். ஏனென்றால், இங்கே தமிழ் பள்ளி இல்லை என்று கோபம் காட்டினார்.
இந்த விவகாரம் படு வைரலாகி சீமானுக்கு சிக்கல் ஏற்படுத்திவருகிறது.
ஏனென்றால் எல்லோரையும் தமிழ் படிக்கச்சொல்லும் சீமான், அவருடைய
பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழி பள்ளியில் படிக்கச் செய்கிறார் என்பதுடன் அதற்கு தமிழ்
பள்ளிகளே இல்லை என்றும் சொல்கிறார்.
அதாவது, கடந்த 2021-22 கல்வியாண்டில் மட்டும் 10ம் வகுப்பு மாணவர்கள்
சுமார் 5 லட்சம் பேர் தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்ற ஆதாரத்தைக்
காட்டிவருகிறார்கள். 12ம் வகுப்பு தேஐ
4.38 லட்சம் பேர் தமிழ் வழியில் எழுதியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இத்தனை பேர் தமிழில் படிக்கும்போது சீமான் பிள்ளைகள்
மட்டும் படிக்க மாட்டார்களா..? அவர்களை மட்டும் இண்டர்நேஷனல் பள்ளியில ஆண்டுக்கு
25 லட்சம் ரூபாய் கட்டி படிக்க வைப்பது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு
சீமான் என்ன பதில் சொல்லப் போகிறார்..?