News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

 

தமிழகத்தில் 33 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ். இவர் கடந்த ஆட்சி காலத்தில் மத்திய அரசு பணிக்கு சென்றார். கடையாக நவோதயா வித்யாலயா சமிதியின் ஆணையராக செயல்பட்டு வந்தார். இவருக்கு விஜய் சார்பில் மாநிலத்துக்குத் திரும்பும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் மாநிலப் பணிக்குத் திரும்பு வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அவரது கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை நியமனக் குழு (ஏசிசி) ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவர் தமிழக பணிக்கு திரும்புகிறார். அவரது பதவிக்காலம் 2029ம் ஆண்டு மே 31ம் தேதி வரை இருக்கிறது.

தமிழகத்தில் அவருக்கு என்ன பதவி கொடுக்கப்படும் என்ற கேள்வியே சமூகவலைதளத்தில் சுழன்றடிக்கிறது.

சட்டமன்றத் தேர்தல் காலத்தில் தமிழக தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தத்தை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக எம்.சாய்குமாரை தேர்தல் ஆணையம் நியமித்தது. விஜய் அரசு பொறுப்பேற்றதும் சாய்குமார் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மீது விஜய் நம்பிக்கை வைத்திருப்பதால்  தற்போது வரை அந்த பதவியில் தொடர்ந்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சாய்குமார் ஓய்வு பெறவுள்ள நிலையில் அவரது பதவிக்காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய  தலைமைச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த ரேஸில் தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜேஷ் லக்கானி இருப்பார் என்று கூறப்படுகிறது.

தமிழகம் முழுக்க பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். அது போல் மாநகராட்சி நிர்வாக ஆணையர், சிப்காட் செயலாளர், சுற்றுலா துறை செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பதவி வகித்தவர். ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர், தமிழக மின் வாரியத்தின் தலைவர், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

இவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது என்பதால் இவரை நியமிக்க விஜய் அழைத்துவந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

உண்மையாகட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link