கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்!

வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அதன்படி வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 400 கோடி செலவில் பேருந்து முனையம் பிரமாண்டமான வகையில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 88 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தினசரி 2300 பேருந்துகள் இயக்கப்படும். இங்கு […]
தமிழக காங்கிரஸ்க்கு அழகுப் பொண்ணு பவ்யா வந்தாச்சு.. அவுட் ஆகிறாரா கே.எஸ்.அழகிரி?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி என்பது தி.மு.க.வின் ஜால்ராவாக மட்டுமே இருந்துவருகிறது. இன்றைய அரசியல் சூழலில் வேறு வழியில்லை என்றாலும், கட்சியை வளர்ப்பதற்கு ராகுல் பல்வேறு முயற்சிகள் செய்துவருகிறார். இந்த வகையில், கட்சியின் சார்பில் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி தமிழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டிருப்பவர் பவ்யா நரசிம்மமூர்த்தி. கர்நாடகத்தை சேர்ந்த பெங்களூரைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற எஸ்.எஸ்.ராமையா கல்லூரியில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் புகழ்பெற்ற கொலம்பியா பல்கலையும் முதுகலை பட்டம் […]
என்ன மனுஷன்யா விஜயகாந்த்… 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்னு அஞ்சலி செலுத்துறாங்க…

அப்துல் கலாம் மறைவுக்கு தமிழகம் முழுக்க பெரும் அனுதாபக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் உண்மையிலே நெஞ்சம் முழுக்க பாசத்துடனும் நேசத்துடனும் எக்கச்சக்க அபிமானிகள் வந்து குவியும் அளவுக்கு நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார் விஜயகாந்த். அவரது உடல் தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை தீவுத் திடலில் இன்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அஞ்சலிக்காக் வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் அங்கிருந்து பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை […]
இரும்பு மனுஷி ஜெயலலிதாவை அலறவிட்ட ஒரே தலைவன் விஜயகாந்த்

அண்ணா தி.மு.க.வை இரும்புக் கோட்டையாக வைத்திருந்த தலைவி ஜெயலலிதாவிடம் பேசுவதற்கு அந்த கட்சியின் தலைவர்கள் மட்டுமின்றி, கூட்டணித் தலைவர்களும், அதிகாரிகளும் ரொம்பவே அச்சப்படுவார்கள். அவர் பேசுவதை மட்டுமே பிறர் கேட்க வேண்டும் என்று நினைப்பார். போயஸ் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு இங்கிலாந்து ராணி போன்று கட்சியையும் ஆட்சியையும் நடத்தியவர் ஜெயலலிதா. சட்டசபையில் அவருக்கு எதிரே நின்று பேசுவதற்கு விருப்பமில்லாமல் கருணாநிதி கூட அவைக்குப் போகாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு கிளம்பிவிடுவார். அப்படிப்பட்ட காலத்தில்தான், சட்டசபையில் மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து […]
மக்கள் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் மினி வரலாறு

அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்று இரண்டு மாபெரும் ஆளுமைகள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு இருந்த நேரத்தில், தனிக்காட்டு ராஜாவாக நுழைந்து எதிர்க்கட்சித் தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்ட மதுரை மண்ணின் மைந்தன், விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த விஜயகாந்த், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். சிறு வயது முதல் சினிமா ரசிகர். எந்த ஒரு சினிமாவை […]
ரெண்டு சீட்டுக்காக எங்க கேப்டனை கொன்னுட்டாங்களே… கதறியழும் விஜயகாந்த் ரசிகர்கள்

நடிகர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக டிசம்பர் 28 காலை உயிர் இழந்ததாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், கண்ணீரும் கம்பலையுமாக கடைசி முறையாக அவரது முகத்தைப் பார்ப்பதற்கு தே.மு.தி.க. தலைமையகத்தில் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் கண்ணீருடன் பேசியபோது, ‘’மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவரை முடிந்த வரையிலும் தனிமை படுத்த வேண்டும் என்று எல்லோருக்குமே தெரியும். ஆனால், மருத்துவமனையில் இருந்து வந்த அடுத்த நாளே பொதுக்குழு என்று அத்தனை பேர் மத்தியில் எங்கள் புரட்சிக் கலைஞரை காட்சிப் […]
ஸ்டார்ட் மியூசிக்… மீண்டும் ராகுல் காந்தி நடைபயணம்.,.. முன்கூட்டியே தேர்தல் அறிவிக்க பா.ஜ.க. திட்டம்

குத்துச்சண்டை சம்மேளனத்தை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்துவிட்டாலும், சாக்ஷி உள்ளிட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இதனை சரியான நடவடிக்கையாக கருதவில்லை. அவர்களை இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். அப்போது அங்கிருந்த வீரர்களின் பயிற்சியில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். அதன்பிறகு ராகுல் காந்தி, ‘’பல வருட கடின உழைப்பு, பொறுமை மற்றும் ஈடு இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றுடன் தனது இரத்தத்தாலும் வியர்வையாலும் மண்ணை பாசனம் செய்த பிறகு, ஒரு வீரர் தனது […]
அமோனியா நச்சு வாயுக் கசிவுக்கே இந்த கதியா…. செத்துக் கிடக்கும் மீன்கள்… மூச்சு திணறும் மக்கள்

எண்ணூர் பகுதி மக்களுக்கு தொடர்ந்து சோதனை மேல் சோதனை வந்துகொண்டே இருக்கின்றன. திருவொற்றியூர் பகுதி தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது சில அசம்பாவிதங்கள் நடந்துவந்தன. இதையடுத்து மிக்ஜாம் புயல் நேரத்தில் ஆலை எண்ணெய் கசிவால் எண்ணூர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். இதற்கு நிவாரணம் இன்னமும் முழுமையாக கொடுக்கப்படவில்லை. அதேபோல், கடலில் எண்ணெய் படலம் இன்னமும் அகற்றப்பட முடியவில்லை. அதற்குள் எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிந்து மக்களை வீட்டை விட்டு வெளீயே விரட்டியுள்ளது. வாயுக் […]
தில்லுமுல்லு துணைவேந்தருக்கு அதற்குள் ஜாமீனா….?

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்றாலும், இந்த பதவியை வைத்துக்கொண்டு தனியே ஒரு கல்வி நிறுவனமே நடத்தியதாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனாலும், தன்னுடைய மேலிடத் தொடர்புகள் மூலம் தப்பிக்கொண்டே இருந்தார். துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்ததும், அதன் மூலம் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் […]
எடப்பாடிக்கு திகார் ஜெயில் உறுதி..! பன்னீரிடம் சி.பி.ஐ. விசாரணை?

வானகரத்தில் எடப்பாடி தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்த அதே நேரத்தில், முன்னாள் முதல்வரான ஓ பன்னீர்செல்வம், கோவையில் அவரது ஆதரவாளர்களுடன், ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு ஆலோசனை குழு’ என்ற பெயரில் ஒரு போட்டிக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ‘”சாதாரண தொண்டனாக இருந்த நான், நகர்மன்ற தலைவராக வந்திருக்க முடியுமா? எம்.எல்.ஏ ஆகியிருக்க முடியுமா? அமைச்சராகி இருக்க முடியுமா? முதல்வராகி இருக்க முடியுமா? அதிமுகவின் இத்தனை ஆண்டு கால சரித்திரத்தில் […]

