விக்கிரவாண்டியில் ராமதாஸ் ஆருடம் பலிக்குமா?

இடைத்தேர்தல் என்றாலே வழக்கமான தேர்தலைவிட கொஞ்சம் அதிகமாகவே ஓட்டுப்பதிவு நடைபெறும். ஆனால், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு 82 சதவிகிதத்தைத் தொட்டுள்ளது விக்கிரவாண்டி. இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பா.ம.க. 25 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். மேலும் அவர், ‘’தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி பா.ம.க. 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்’’ என்று கூறியிருக்கிறார். இது சாத்தியமா என்று பார்க்கலாம். இந்த தேர்தலில் […]
மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை கைது செய்வதற்கு அதிரடி வேட்டை

தமிழக காவல் துறைக்கு சவால் விடும் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை நாளைக்குள் கைது செய்யவேண்டும் என்று இலக்கு வைத்து தமிழக காவல் துறை தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பிரகாஷுக்கு, விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொலை […]
மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது… முடிவே இல்லையா மோடிஜி

தமிழகத்தில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிவுக்கு வந்து அவர்கள் கடலில் நுழைந்த உடனே இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களை விடுவிக்கும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக மீனவர்கள் மேலும் 13 பேர் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து […]
ராமதாஸுடன் பேரம் முடிந்து விட்டது..? ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சூசக அறிவிப்பு

தொடர்ந்து தோல்விகளை சந்தித்துவரும் எடப்பாடி பழனிசாமியிடம், ஒன்றுபட்ட அ.தி.மு.க. வேண்டும் என்று மாஜிக்கள் சிலர் குரல் கொடுத்து வருகிறார்கள் என்று தினம் தினம் செய்திகள் வெளியாகின்றன. இந்த நிலையில் திடீர் என ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ’2026 தேர்தலில் வலுவான கூட்டணி அமையும்’ என்று எடப்பாடி பழனிசாமி உறுதி கொடுத்திருக்கிறார். இதன் அர்த்தம் பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்கிறார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை முடிந்ததுமே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு நடைபெறும் என்று கூறப்பட்டு வந்தது. அ.தி.மு.க.வில் […]
கைதான சாட்டை துரைமுருகனுக்கு குண்டர் சட்டம்..! அதிர்ச்சியில் சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் மீது அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது சவுக்கு சங்கர் போன்று வெளியே வர முடியாத அளவுக்கு கடுமையான வழக்குகள் சேர்க்கப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின்றன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தின் போது, கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர் வீட்டில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. ஸ்டிக்கரைக் காட்டி, […]
சென்னையில் 6,000 ரவுடிகளுக்கு செக்! புது கமிஷனர் அதிரடி!

சென்னையில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி 6,000 ரவுடிகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொருவரின் வீடு தேடிச் சென்று அவர்களை நேரில் விசாரணை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் ரவுடிகள் அராஜகம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து பல உயர் போலீஸ் […]
மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு! எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Cதமிழகத்தில் அதிகரித்து வரும் வன்முறை வெறியாட்டங்களால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மக்களே நமக்கு நாமே பாதுகாப்பு என்று அறிவுரை கூறியுள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. சென்னை பெரம்பூரில் மக்கள் நடமாட்டம் அதிகமான இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக 8 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் உண்மையான கொலையாளிகள் கிடையாது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர். […]
இடைத்தேர்தலுக்கு தயாரான விக்கிரவாண்டி!

விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நாளை (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தி.மு.க.சட்டமன்ற வேட்பாளர் புகழேந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேர்தல் அறிவிப்பு […]
சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து! 2 பேர் பலி!

சிவகாசி அடுத்த காளையார் குறிச்சியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று (ஜூலை 9ம்தேதி) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. முருகவேல் என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுப்ரீம் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. 4 அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கமாக வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 தொழிலாளர்கள் பட்டாசு மருந்து கலந்து கொண்டிருந்தனர். கோப்பையில் நிரப்பப்பட்டு இருந்த […]
நீட் வினாத்தாள் கசிவு உண்மைதான்! ஒப்புக்கொண்ட மத்திய அரசு!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் கசிந்தது உண்மைதான் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக் கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் 5ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து அதன் முடிவுகள் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டதில் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டன. அதன்படி இத்தேர்வில் 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது சர்ச்சையை கிளப்பியது. அதே போன்று வினாத்தாள் கசிவு, பல […]

