அன்புமணி, சீமானுக்கு டெபாசிட் போச்சு… ஸ்டாலின், எடப்பாடி செம ஹேப்பி

அன்புமணி, சீமானுக்கு டெபாசிட் போச்சு… ஸ்டாலின், எடப்பாடி செம ஹேப்பி இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறும் என்பார்கள். அந்த அளவுக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள் இறங்கி வேலை செய்வார்கள். ஆனாலும், அன்புமணிக்கு ரொம்பவே நம்பிக்கை இருந்தது. ‘இது ஈரோடு இடைத் தேர்தல் அல்ல, எங்க ஏரியா… இங்கே உங்களால் ஜெயிக்க முடியாது’ என்று சவால் விட்டார் அன்புமணி. பா.ம.க.வுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கிக் […]
எஸ்.ஐ.க்கள், டி.எஸ்.பி.க்களுக்கு புது உத்தரவு! அனல் பறக்கும் காவல் துறை!

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தையடுத்து சென்னை மாநகர கமிஷனராக பணியாற்றிய சந்தீப்ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு கூடுதல் டி.ஜி.பி. அருண் நியமிக்கப்பட்டார். அதே போல் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமினம் செய்யப்பட்டார். கடந்த (ஜூலை)5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் […]
நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணியா? அ.தி.மு.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாக இணையத்தில் செய்தி தீயாக பரவி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் இன்று 3வது நாளாக நடைபெற்றது. கடந்த 10ம் தேதி தொடங்கிய இக்கூட்டத்தில் […]
எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்துக்குக் காரணம் பா.ஜ.க…?

அதிமுகவின் மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி போட்ட ஒரே ஒரு கண்டிஷன், யாரும் ஒருங்கிணைப்பு குறித்து பேசக் கூடாது என்பது தான். அதனாலே, அத்தனை பேரும் வலுவான கூட்டணி குறித்து வலியுறுத்தினார்கள். இப்போது பன்னீர்செல்வம் மட்டுமின்றி ஓபிஎஸ் அணியில் இருந்த ஜேசிடி பிரபாகர், புகழேந்தி ஆகியோர் கேசி பழனிச்சாமியோடு இணைந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு என்பதை நிறுவி, ஒன்றிணைப்பு குறித்து தொடர்ந்து […]
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன், அமலாக்கத் துறைக்கு ஆப்பு

அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மேற்கொள்ளும் கைது நடவடிக்கைகள் தொடர்பான அரசியல் சாசன கேள்விகளை முன்வைத்து அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது, அமலாக்கத் துறைக்கு பெரும் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உச்ச நீதிமன்றம், ‘’சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மீதான அமலாக்க துறையின் கைது […]
ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு. திருமாவளவன், சீமானுக்கு கமாண்டோ பாதுகாப்பு..?

ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த சமயத்தில் முதல் நபராக அங்கே சென்றது மட்டுமின்றி, ‘இப்போது சரண் அடைந்திருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை, உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்’ என்று ஆளும் தி.மு.க.வுக்கு அதிர்ச்சி கொடுத்தவர் திருமாவளவன். கூட்டணிக் கட்சித் தலைவரே பொய்யான நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக வாக்குமூலம் கொடுத்த பிறகே தி.மு.க. மீது அனைத்துக் கட்சிகளும் அவதூறு பரப்பின. ஆகவே, இந்த விஷயத்தில் திருமா மீது தி.மு.க.வினர் கடும் கோபத்தில் இருந்தார்கள். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை […]
சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் சதிகாரன் கருணாநிதி பாடல். மாவுக்கட்டில் இருந்து துரைமுருகன் ஜஸ்ட் எஸ்கேப்.?

ஒரு பாடலை ஹிட் ஆக்குவதற்காக எக்கச்சக்கமாக புரமோஷன் செய்யவேண்டிய காலகட்டம் இது. ஆனால், சாட்டை துரைமுருகனை கைது செய்தது மூலம் கருணாநிதி பாடல் ஒரே நாளில் சூப்பர் ஹிட் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. இது வரை அந்த பாடலை கேட்காதவர்கள் கூட, டவுன்லோடு செய்து பலருக்கும் போட்டுக் காட்டுகிறார். இந்தியாவிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர் அணி வைத்திருப்பதாக சொல்லப்படும் தி.மு.க.வுக்கு சாட்டை துரைமுருகன் கைதும் அவர் விடுதலை செய்யப்பட்டதும் மிகப்பெரும் கரும்புள்ளியாக மாறியிருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் […]
டாஸ்மாக் கடைகளை உடனடியாக குறைக்க முடியாது! அமைச்சர் முத்துசாமி அந்தர்பல்டி!

புதுச்சேரியில் இருந்து வரும் எல்லா சாலைகளிலும் தமிழக போலீசார் 24 மணிநேரமும் காவல் இருக்க முடியாது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்த போது, அண்டை மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்து குடித்த 7 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழக மக்கள் சிலர் புதுச்சேரியில் இருந்து சாராயத்தை வாங்கி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை […]
அண்ணாமலைக்கு நன்றி தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியினர்! ஏன் தெரியுமா?

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்குமான வார்த்தை போர் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் மூக்கை நுழைத்துள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தன்னை விமர்சித்த நிலையில் அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை ரவுடி என்று பேட்டி அளித்தார் அண்ணாமலை. இதற்கு பதிலடி கொடுத்த செல்வப்பெருந்தகை, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று தெரிவித்ததோட போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார். இந்தநிலையில் […]
அண்ணாமலை ஒரு வேதாளம்! வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேதாளம் போன்றவர். அவர் இப்போது எங்களை விட்டு செல்வப்பெருந்தகை மீது ஏறியுள்ளார் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சென்னை எழும்பூரில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாளில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அழகுமுத்துக்கோனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்கள் ஜெயக்குமார் பேசினார். […]

