அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் ரெய்டு! முக்கிய பின்னணி!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் […]
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். ரவீந்திரநாத்குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரவீந்திரநாத்குமாருக்கும், அவரது மனைவி ஆனந்திக்கும் இடையில் சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் விரைவில் விவாகரத்து செய்துவிட்டு பிரியப் […]
33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்! முக்கிய தகவல்கள்!

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கூடியுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தற்போது 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று சிறப்புக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அதன்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வழி வகை செய்யும் மசோதாவான இதற்கு ‘‘நாரிசக்தி வந்தன்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் சட்ட மசோதா என்ற பெருமையை […]
புதிய கட்டிடத்தில் இன்று நாடாளுமன்ற கூட்டம்! இத்தனை தகவல்களா?

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடரின் அமர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளதால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று (செப்.18) சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இந்தியாவின் கடந்த 75 ஆண்டு கால ஜனநாயக வரலாறு குறித்து விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.19) முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் தங்கள் அலுவல்களை தொடங்கி செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று முதல் […]
பிரதான சாலைக்கு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் பெயர்! முதலமைச்சருக்கு நன்றி!

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் முதன்மைச் சாலை என்று பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மாண்டலின் ஸ்ரீநிவாசின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மாண்டலின் இசைக்கலைஞரான மாண்டலின் ஸ்ரீநிவாஸ், ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலக்கோல் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் ஆசிரியரான ருத்ரராஜூ சுப்பாராஜூ மாண்டலின் ஸ்ரீநிவாசனுக்கு மாண்டலின் இசைக்கருவியை வாசிக்க பயிற்சி அளித்தார். 1969ம் ஆண்டு பிறந்த உலகப்புகழ் வாய்ந்த மாண்டலின் ஸ்ரீநிவாசன் 2014ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி உடல்நலக் […]
கனடா தூதர் வெளியேற 5 நாட்கள் கெடு! கனடாவுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசு!

அடுத்த 5 நாட்களுக்குள் கனடா தூதரக அதிகாரி இந்தியா¬ விட்டு வெளியேற வேண்டும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்ஜிப் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்டார். இவரின் படுகொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது உலக அரங்கில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. இதன் விளைவாக கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து மூத்த அதிகாரியை வெளியேற்றி கனடா அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது கனடா பிரதமர் […]
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி: செல்வப்பெருந்தகைக்கு வாய்ப்பு!

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகைக்கு அதிகளவில் வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்வியும் மேலோங்கியுள்ளது இது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா, ராகுல் ஆகியோர் நேற்று முன்தினம் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று இரவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெல்லியில் இருந்து வெளியிடப்படலாம் […]
சென்னை 59வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் காலமானார்! முக்கிய பின்னணி!

சென்னை மாநகராட்சியின் 59வது வார்டு தி.மு.க. மாமன்ற உறுப்பினர் சரஸ்வதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் தி.மு.க. 153 வார்டுகளிலும், அ.தி.மு.க. 15 வார்டுகளிலும், காங்கிரஸ் 13 வார்டுகளிலும், சி.பி.எம். மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா 4 வார்டுகளிலும் உறுப்பினர்களை பெற்றுள்ளன. ஏற்கனவே 122வது வார்டு தி.மு.க. கவுன்சிலரான ஷிபா வாசு, காங்கிரஸ் கவுன்சிலரான 165வது வார்டு கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் மற்றும் […]
காவிரியில் போதுமான நீர் இருந்தும் தண்ணீர் தர மறுப்பு! அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

காவிரியில் போதுமான நீர் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி விவகாரம் எந்த தலைமுறையில்தான் விடிவுக்கு வரும் என்பது பொதுமக்களின் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் காவிரி நீர் குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுடெல்லியில் தமிழக […]
எங்கு நடந்தாலும் சாதிய தீண்டாமை தவறுதான்! அமைச்சர் உதயநிதி பேச்சு!

சென்னையில் நடந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்கான கருத்துகணிப்பு தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாதியை ஒழிக்க நாங்கள் போராடி வருகிறோம் என்று தெரிவித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். பொதுமக்களிடம் கருத்துக் கணிப்புக்கான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்காக […]

