News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக சோதனை!

தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் கடந்த 3ம் தேதி வருமானவரித்துறையினர் தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன்படி கடந்த 3ம் தேதி காலை தொடங்கிய சோதனையின் போது அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். வருமானவரித்துறை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி […]

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல்! 21 வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.   ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் வருகிற இம்மாதம் (நவம்பர்) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் இதர பிற கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.   ஒருபுறம் தேர்தல் பிரசாரத்துடன் சேர்த்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மாநிலத்தில் […]

சொத்து குவிப்பு வழக்கு: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பழகன் நேரில் ஆஜர்?

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் அவர் நேரில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், தருமபுரி மாவட்ட செயலாளராகவும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் இருந்த போது ரூ.45 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு […]

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது யார்? டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல்!

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது ஷாஜகான் இல்லை, ராஜா மான்சிங்கின் அரண்மனையைத்தான் அவர் சீரமைத்துள்ளார் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். கட்டிடக்கலைக்கே பெருமை, உலக அதிசயம், காதலர்களின் நினைவுச்சின்னம் என்று போற்றப்பட்டு வரும் தாஜ்மால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த கட்டிடம் முழுவதும் பளிங்கு கற்களால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டினார் […]

மேடையில் நடனமாடிய முதலமைச்சர்! தொண்டர்கள் உற்சாகம்!

கர்நாடக உதயநாளை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, நடனக்குழுவினருடன் இணைந்து நடமானடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.   மைசூர் என்ற பெயர் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட 50வது ஆண்டு பொன்விழா கர்நாடகத்தில் களைகட்டியது. பொன்விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, விஜயநகர மாவட்டம் ஹம்பிக்கு நேற்று இரவு (நவ.2) சென்றிருந்தார்.   அங்கு விழா மேடையில் ‘வீர […]

தி.நகர் ரெசிடென்சி ஓட்டலில் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை!

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பாகி உள்ளது. தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற செய்தியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலான […]

உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி! என்ன செய்தார் தெரியுமா?

உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை ‘மை லார்டு’ என்று அழைக்காதீர்கள் என மூத்த வழக்கறிஞரை கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை பொதுவாக ‘மை லார்டு’ அல்லது ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பதை நாம் பார்த்திருப்போம். இது ஆங்கிலேயர் காலத்தைய வழக்கம் என்பதால், இதனை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி இதற்கு தடை விதித்து கடந்த 2006ம் ஆண்டு இந்திய பார் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் கொண்டு வரப்பட்ட […]

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய அருணை கல்லூரியில் ஐ.டி.ரெய்டு!

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து கிடைத்துள்ள […]

தீபாவளிக்கு முன்பாகவே கலைஞர் உரிமைத் தொகை? குடும்பத்தலைவிகள் எதிர்பார்ப்பு!

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிடும் என்று குடும்பத் தலைவிகள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் மேல்முறையீடு […]

அரசு பள்ளிகளில் நாள்தோறும் நீட் பயிற்சி வகுப்புகள்! முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.   மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜே.இ.இ. எனும் பயிற்சியும் தேவைப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாமல் உள்ளதால், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை வைத்து […]