கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மர்மமாக கூட்டம் நடத்துகிறார். முன்னாள் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பது இல்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் அந்தந்த மாநில கட்சி தலைவர்களுடனும், கட்சி பிரதிநிதிகளுடனும் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று (நவ.20) […]
சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு! உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் இடைக்கால மனுவை தற்போது சாதாரண ஜாமீனாக மாற்றி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதியன்று கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் விஜயவாடாவில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்திலும் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். இதற்கிடையில் கண்பார்வை உள்ளிட்ட உடல்நலக்குறைவால் தான் […]
கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம்!

சென்னையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. வருகிற 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிப்பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்கான பணியை அந்தந்த மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளது. அதன் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் […]
விஜயகாந்திற்கு செற்கை சுவாசம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தே.மு.தி.க. தலைவரும் நடிகரும் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக நடிப்பில் இருந்தும் கட்சிப்பணியில் இருந்தும் விலகி ஓய்வெடுத்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி வெளிநாட்டிற்கும் சென்றும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா தலைமையில் கட்சியின் அனைத்து பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. […]
ரூ.2 லட்சம் பரிசு பெற்ற ‘நீர்க்கொல்லி’ புத்தகம்! ப.சிதம்பரம் வழங்கினார்!

‘சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு’ வழங்கும் விழாவில் ‘நீர்க்கொல்லி’ புத்தகத்துக்கு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசாக வழங்கப்பட்டது. சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று (நவ.19) கடந்த 2022ம் ஆண்டுக்கான ‘சவுந்தரா கைலாசம் இலக்கிய பரிசு’ விழா எழுத்து தமிழ் இலக்கிய அமைப்பு சார்பில் நடைபெற்றது. இவ்விழாவில் எழுத்தாளர் ஷாராஜ் எழுதிய ‘நீர்க்கொல்லி’ நாவல் சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.2 லட்சம் இலக்கிய பரிசை ப.சிதம்பரம் மற்றும் கவிஞர் வைரமுத்து […]
பிரபல நடிகைக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

பிரபல நடிகையான ஜெயப்பிரதா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் எம்.பி.யும் பிரபல நடிகையுமான ஜெயப்பிரதா என்றால் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சலங்கை ஒலி திரைப்படம்தான் பலரது நினைவுக்கு வரும். தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஜெயப்பிரதா 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அவர் நடித்த நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலும் தசாவதாரம் திரைப்படத்தில் கேமியோ […]
மதி அனுபவ அங்காடி கட்டிடம்! அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி அனுபவ அங்காடி கட்டடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழகத்தில் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடையும் வகையில் மதி அனுபவ அங்காடி கட்டிடத்தின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மதி அனுபவ அங்காடி கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மேலும் […]
இன்று கூடிய சட்டமன்ற சிறப்புக் கூட்டம்! புதிய தகவல்கள்!

தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் பல சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாத போதிலும், சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். மிகவும் சோர்வாக காணப்பட்ட முதலமைச்சர் மக்கள் நலப்பணியே முக்கியம் என்று உரை நிகழ்த்தி தீர்மானங்களை நிறைவேற்றியது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டமசோதாக்களை சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு நிறைவேற்றி மீண்டும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட […]
மீண்டும் நிறைவேறிய 10 மசோதாக்கள்! சட்டமன்றத்தில் அதிரடி!

ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் இன்று சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 13ம் தேதி தமிழகத்தில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் […]
காங்கிரசில் இணைந்த விஜயசாந்திக்கு முக்கிய பொறுப்பு!

பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, காங்கிரசில் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மேடக் எம்.பி.யும், அதிரடி நடிகையுமான விஜயசாந்தி பா.ஜ.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காததால் அதிருப்தியடைந்த விஜயசாந்தி, பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி தீயாக பரவியது. இதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் பா.ஜ.க.வின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த விஜயசாந்தி, காங்கிரசில் இணைய உள்ளார் என்ற செய்தியும் கடந்த […]

