News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்! வைரல் புகைப்படங்கள்!

கர்நாடகா சென்ற பிரதமர் மோடி தேஜஸ் போர் விமானத்தில் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகாவின் பெங்களூரில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தளத்திற்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திரமோடி பார்வையிட்டார். அப்போது விமானங்களின் உற்பத்தியை உள்ளடக்கிய ஹெச்ஏஎல்&ன் இயக்கம் மற்றும் பணிகள் குறித்து அங்கிருந்த உயர் அதிகாரிகளிடம் கலந்துரையாடி கேட்டறிந்தார். அதன் பின்னர் தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். பயணத்திற்கான பிரத்யேக உடையுடன் பிரதமர் மோடி […]

டிச.9 முதல் ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு!

ஆந்திராவில் வருகிற டிசம்பர் 9ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இருப்பினும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பீகார் அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. அதன் வரிசையில் தற்போது ஆந்திர மாநிலமும்  இணைய உள்ளது. அதன்படி ஆந்திராவில் வருகிற டிசம்பர் மாதம்  9ம் தேதி சாதிவாரி மக்கள் தொகை […]

சட்டமன்ற தேர்தல்! ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு  மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், எப்படியும் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறிக்க வேண்டும் என்று பா.ஜ.க.வும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே, […]

கொடநாடு வழக்கு! முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மகனுக் சி.பி.சி.ஐ.டி சம்மன்!

கொடநாடு வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.   மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தரிகியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் சொந்த பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.   போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இந்த கொலை கொள்ளை சம்பவங்களை சேலம் ஆத்தூரச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது தெரியவந்தது. இதில் […]

‘‘ஸ்டார்ட் அப் தமிழா’’ ரியாலிட்டி ஷோ! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்!

ஸ்டார்ட் அப் தமிழா தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார்.   சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ‘ஸ்டார்ட் அப் தமிழா’’ என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்து உரை நிகழ்த்தினார்.     நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் புதிய தொழில் […]

பிரமோத்குமார் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்-! நீதிமன்றம் உத்தரவு!

பெண் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டப்பட்ட பிரமோத்குமார் உள்பட 5 பேரும் வருகிற 28ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.   கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட  பாசி போரக்ஸ் டிரேடிங் என்ற நிதி நிறுவனம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் அதிகளவில் முதலீடு […]

தமிழுக்கு முக்கியத்துவம் தரக்கோரி தொடர் முழக்கக் கூட்டம்! பா.ம.க. தலைவர் அன்புமணி உரை!

உயர்நீதிமன்றத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி நடைபெற்ற தொடர் முழக்க கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.   சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கோரி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான தொடர் முழக்கக் கூட்டத்தில் பா.ம.க.வினர் திரண்டனர். சென்னை உயர்நீதிமன்றம் ஆவின் கேட் அருகில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் நிலையில் இக்கூட்டத்தில் திரளான வழக்கறிஞர் மற்றும் பா.ம.க.வினர் ஒன்றாக அமர்ந்து […]

நடிகர் பிரகாஷ்ராஜூக்கு அமலாக்கத்துறை சம்மன்! பரபரப்பு தகவல்கள்!

ரூ.100 கோடி பண மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் பிரகாஜூக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்றி நடித்து வரும் பிரகாஷ் ராஜூக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.   திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரணவ் ஜூவல்லர்ஸ், தங்கநகை முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் […]

ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல்! ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!

அரசியல் கட்சிகள் தீவிரமாக நடத்திய தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் ராஜஸ்தானில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் ஏற்கனவே மிசோரம், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில் நாளை (நவ.25) ராஜஸ்தானிலும், வருகிற 30ம் தேதி தெலுங்கானாவிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற […]

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம்! கே.எஸ்.அழகிரி பளிச்!

வரப்போகும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிக சீட் கேட்போம் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.   வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்தான் தற்போது முழு இந்தியாவின் முழு பேச்சாக உள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய கட்சிகள் அந்தந்த மாநில கட்சி நிர்வாகிகளிடம் பிரசார யுக்திகளையும், தேர்தல் பணிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.   இந்நிலையில் திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி வந்திருந்த […]