News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ரூ.2,000 பொங்கல் பரிசு! அமைச்சர் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடை மூலம் ரூ.2 ஆயிரம் கொடுப்பதற்காக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டத்தில் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஒவ்வொரு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.   அ.தி.மு.க. தனது இறுதிகட்ட ஆட்சியில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.2,500 பொங்கல் பரிசாக வழங்கியது. அது […]

தெலுங்கானாவில் அமைதியான முறையில் தேர்தல் நடந்து வருகிறது! தலைமை தேர்தல் அதிகாரி!

தெலுங்கானாவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாகவும் அமைதியான முறையிலும் நடந்து வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 199 தொகுதிகளைக் கொண்ட தெலுங்கானாவில் நேற்று முன்தினத்துடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று (நவ.29) காலை முதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முன்னதாக வாக்குச்சாவடி அதிகாரிகள், முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் முன்னிலையில் வாக்குச்சாவடி எந்திரங்கள் சரியாக […]

பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம்! தனியாரிடம் ஒப்படைப்பு!

மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் இன்று (நவ.29), ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.   இக்கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த கம்யூனிஸ்டு தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சங்கரய்யா, ஆன்மிக தலைவர் பங்காரு அடிகளார் ஆகியோரின் மறைவுக்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.   அதைத்தொடர்ந்து உறுப்பினர்களின் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது தண்டையார்பேட்டைமண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பரமேஸ்வரன் நகர் பகுதியில் கழிவுநீர், மின்வசதி, குடிநீர் […]

செல்வகணபதி மீண்டும் திமுக எம்.பி. ஆவாரா?

1991-96-ம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் டி.எம்.செல்வகணபதி. தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து.   சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு, செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆச்சார்யலு, சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. அதேவேளையில் கூட்டு சதி […]

மீட்கப்பட்ட 41 சுரங்கத்தொழிலாளர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் சிக்கி மீட்கப்பட்ட 41 சுரங்கத்தொழிலாளர்களுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.   உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் […]

செவிலியர்களுக்கு மடிக்கணினி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்!

சென்னையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியின் மடிக்கணினிகளை வழங்கினார்.   சென்னை தேனாம்பேட்டை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனரம் டி.எம்.எஸ். வளாகத்தில் மாவட்ட தாய் சேய் நல அலுவலர்கள் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இன்று (நவ.29) மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை! மருத்துவமனை அறிக்கையால் அதிர்ச்சி!

தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் நிலை தற்போது சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சினிமா மற்றும் அரசியல் பணிகளில் இருந்து விலகி ஓய்வில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. கட்சியை அதன் பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த 18ம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மார்பு […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கெட்! என்று முதல் தெரியுமா?

புதுவையில் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு சிறுதானியத்தால்  தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   யூனியன் பிரதேசமான புதுவையில் 300 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் ஏற்கனவே மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.   கடந்த 2018ம் ஆண்டு முதல் அட்சயபாத்திரம் என்ற நிறுவனத்துடன் புதுவை அரசு ஒப்பந்தம் கொண்டது.  அதன்படி 11  இடங்களில் அமைந்துள்ள நவீன சமையல் கூட்டங்களின் மூலம் மதிய […]

41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது நிம்மதி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த 12ம் தேதி 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட நிலையில் அவர்களை பத்திரமாக மீட்க கடந்த 17 நாட்களாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முதலில் தொழில்நுட்ப கோளாறு அதன்பின்னர் மழை உள்ளிட்ட இயற்கை சீற்றத்தால் தொழிலாளர்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் தளராத மீட்புப்படையினர் 41 தொழிலாளர்களையும் தற்போது பத்திரமாக […]

சீமானை எதிர்க்க யாருக்கும் யோக்கியதை இல்லை! விஜயலட்சுமி பளிச்!

கடந்த 3 மாதமாக போலீஸ் வசம் இருக்கும் தனது மொபைல் போனை வாங்கிக்கொடுத்துவிட்டால் தான் இனி தமிழகத்திற்கே வரப்போவதில்லை என்று நடிகை விஜயலட்சுமி போலீசாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.   நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் நடிகை விஜயலட்சுமி எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.   அந்த வீடியோவில், ‘‘கடந்த 2011ல் சீமானுக்கு எதிராக நான் கொடுத்த ஆதாரங்களை போலீசார் அழித்துவிட்டனர் என்னிடம் […]