நாம் தமிழர் மேடை மீது கல் வீச்சு! சீமான் கொடுத்த மாஸ் பதில்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் சிலர் மேடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த கற்கள் மேடைக்கு […]
இன்றே கடைசி! 2,000 ரூபாயுடன் வங்கிக்கு படையெடுக்கும் மக்கள்!

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் (செப்.30) முடிவடைவதால் வங்கிகளுக்கு பொதுமக்கள் சிலர் விரைந்துள்ளனர். இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் (இன்று) என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளில் தங்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் வங்களில் குவிந்த பொது மக்களிடம் தங்களிடம் […]
விக்ரம் லேண்டர், ரோவரை எழுப்ப கடைசி முயற்சி! இஸ்ரோ விஞ்ஞானிகள் முக்கிய தகவல்!

நிலவின் தென் துருவத்தில் உறக்க நிலையில் இருக்கும் சந்திராயன்3 விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை எழுப்பும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து […]
காவிரி விவகாரம்! போராட்டத்தில் குதித்த நாம் தமிழர் கட்சி!

காவிரி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளனர். தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினரும், கன்னட விவசாயிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெங்களூர், மைசூர் நகரங்களிலும், கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் திரைப்பட புரொமோஷனில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் விழா மேடையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் திரைத்துரையினர் […]
அக்.3ம் தேதி அண்ணாமலை தலைமையில் ஆலோசனைக் கூட்டம்! முக்கிய பின்னணி!

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற 3ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வுடனான கூட்டணி முறிவுக்கு காரணம் அண்ணாமலைதான் என்று குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், பாஜக தேசியத் தலைமை இன்னும் இதுகுறித்து எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. அதேசமயமம், அண்ணாமலைக்கு எதிரான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பா.ஜ.க.வின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை […]
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது! குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுடன் வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா சட்டமானது. புதிய நாடாளுமன்றத்தில் கூடிய சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பேராதரவுடன் மசோதா ஏகமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் மகளிர் […]
கர்நாடகாவுக்கு புதிய உத்தரவிட்ட காவிரி மேலாண்மை வாரியம்! என்னவென்று தெரியுமா?

தமிழகத்திற்கு 3,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. அதன் எதிரொலியாக இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம், பெங்களூர் மற்றும் மைசூர் நகரங்களில் 144 தடை உத்தரவு என கர்நாடக மாநிலம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் […]
காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி! காவல் 7வது முறையாக நீட்டிப்பு!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் […]
நாளையுடன் கடைசி! வங்கிகளுக்கு விரைந்து செல்லும் பொதுமக்கள்!

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு நாளையுடன் (செப்.30) முடிவடைவதால் வங்கிகளுக்கு பொதுமக்கள் சிலர் விரைந்துள்ளனர். செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் வங்கிகளில் தங்களிடம் புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் வங்களில் குவிந்த பொது மக்களிடம் தங்களிடம் இருந்த 2 ஆயிரம் […]
அவசரமாக கூட்டப்படும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! முக்கிய பின்னணி!

கர்நாடகாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் இன்று அவசர அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி கடந்த 26ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.29) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. […]

