News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்று திடீர் ஆலோசனை மேற்கொள்கிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது.   அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் […]

சிக்கிம் காட்டாற்று வெள்ளம்! மாயமான 23 ராணுவ வீரர்கள்!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய 23 ராணுவ வீரர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் தீஸ்தா நதியில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. லச்சேன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் காரணமாக தீஸ்தா நதியில் திடீரென்று காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டோடியது. அப்போது பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் வெள்ளத்தில் சிக்கினர். இதில் 23 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் […]

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! டெல்லியில் உணரப்பட்டதால் மக்கள் பீதி!

நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நில அதிர்வாக உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர். நேபாளத்தில் இன்று மதியம் சரியாக பிற்பகல் 2.15 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான நிலையில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 300 கி.மீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தையும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் சந்திப்பு!

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீரென்று கோவையில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. அ.தி.மு.க., பா.ஜ.க. இடையிலான கூட்டணி முறிவுக்கு பின்னர் இரு கட்சிகளின் ஒவ்வொரு நகர்வும் அரசியல் நோக்கர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மறைந்த தலைவர்களை அண்ணாமலை அவமரியாதையாக பேசிவிட்டார் என்பதை முன்னிறுத்தி பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டார். எனவே அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தமிழக பா.ஜ.க. தலைவர் நியமிக்கப்பட்டால் முறிந்த கூட்டணி மீண்டும் […]

இந்திய கோடீஸ்வரர் மகனுடன் பலி! ஜிம்பாப்வேயில் என்ன நடந்தது?

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவா தனது 22 வயது மகனுடன் ஜிம்பாப்வேயில் நடந்த விமான விபத்தில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென்மேற்கு ஜிம்பாப்வேயில் உள்ள வைரச்சுரங்கம் அருகில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் அது இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவரான ஹர்பால் ரந்தாவாவுக்கு சொந்தமான தனிவிமானம் என்று அடையாளம் காணப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த செப்டம்பர் 29ம் தேதி நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அதில் […]

எடப்பாடி பழனிசாமி- தமிமுன் அன்சாரி திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி திடீரென்று சந்தித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் நெடுஞ்சாலை நகரில் அமைந்துள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு தமிமுன் அன்சாரி கூறும்போது, […]

5ஜி இணைய சேவை! தரவரிசையில் 47வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

5ஜி இணைய சேவை சர்வதேச தரவரிசையில் இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளிய இந்தியா 47வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.   இந்தியாவில் அதிவேக இணையசேவையான 5ஜி சேவையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தின. இதன் மூலம் இந்தியாவின் இணைய வேக செயல்திறன் 3.59 மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதன் தேர்வை அதிகப்படுத்திள்ளது.   அதன்படி கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதத்தில் வினாடிக்கு 13.87 எம்.பி.யாக கணக்கிடப்பட்டிருந்த சராசரி […]

ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்துள்ள பா.ஜ.க. தலைமை! டி.டி.வி. அடுத்த மூவ் என்ன?

ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டிவி. தினகரனையும் பா.ஜ.க. தலைமை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நேரத்தில் எப்படியும் பா.ஜ.க. தலைமை தனக்கு அழைப்பு விடுக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அ.தி.மு.க.வில் இருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எப்படியும் அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்திவிட வேண்டும் என்றும் அ.தி.மு.க.வில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்றும் தனது ஆதரவாளர்களுடன் […]

ஒரே நாளில் 12 பச்சிளங்குழந்தைகள் பலி! மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது?

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பச்சிளங்குழந்தைகள் உள்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு மருந்து  பற்றாக்குறை நிலவுவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் உள்பட 24 பேர் மருந்து பற்றாக்குறை காரணமாக […]

தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்! குஷ்பு பெருமிதம்!

நடிகை குஷ்பு தன்னை தெய்வத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் நான்தான் என்று பெருமிதத்துடன் பதிவு ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறார்.     கேரள மாநிலம் திருச்சூரில் வடக்கும்புரம் ஸ்ரீவிஷ்ணுமாய கோவில் சென்ட்ராபின்னியில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவிஷ்ணுமய சுவாமி, சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீகக் குழந்தை ஆகியோர் பிரதான தெய்வங்களை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.     இந்நிலையில் விஷ்ணுமாயா கோவில் நிர்வாகம் பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவை அழைப்பு சிறப்பு […]