News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழக பேரிடரை பார்வையிட மோடி வரவே மாட்டாரா..? டெல்லி ஸ்டாலின் சந்திப்பு எக்ஸ்க்ளூசிவ்

வட மாநிலங்களில் வெள்ளம், புயல் போன்ற பாதிப்புகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு மட்டும் இதுவரை வருகை தந்ததே இல்லை. எடப்பாடி ஆட்சி நடந்தபோதும் தற்போது மிக்ஜாம் புயலுக்கு சென்னை கடுமையாக பாதிக்கப்பட்ட நேரத்திலும், நெல்லை, கன்னியாகுமரி பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும் மோடி எட்டிப் பார்க்கவில்லை.   பிரதமர் நேரில் பார்வையிட்டால் கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் அவரை பார்வையிடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் […]

டெல்லியில் முதலமைச்சர்! அரசின் நடவடிக்கையால் குறைந்த மழை வெள்ள பாதிப்பு!

டெல்லி சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை விட அதிகளவில் மழை பெய்ததாகவும், அரசின் நடவடிக்கையால் மழை வெள்ள பாதிப்பு குறைந்ததாகவும் பேட்டி அளித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. சேதங்களை சரி செய்வதற்காக இடைக்கால நிதியாக ரூ.5,060 கோடியும், நிரந்தர நிவாரணமாக ரூ.12,659 கோடியும் தேவை என்று மத்திய அரசிடம், தமிழக அரசு முறையிட்டிருந்தது. இது குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து […]

செந்தில் பாலாஜிக்கு அடுத்து ஜெயிலுக்குப் போகிறாரா பொன்முடி..? காரிலிருந்து தேசியக்கொடி அகற்றம்

அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜிக்கு எப்படியும் ஜாமீன் வாங்கிவிட வேண்டும் என்று தி.மு.க.வினர் தலைகீழாக நின்றும் முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த அமைச்சரும் சிறைக்குப் போகும் சூழல் ஏற்பட்டிருப்பதைக் கண்டு தி.மு.க.வினர் அரண்டு போயிருக்கிறார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி உள்ளிட்ட குடும்பத்தினர் மீதும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் 2011ல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் […]

தென்மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளநீர் போல் தேங்கியுள்ள மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி கருணாநிதி எம்.பி நேரில் பார்வையிட்டார்.   குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து […]

மக்களுடன் முதல்வர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.18) தொடங்கி வைத்தார்.   தமிழக அரசு கொண்டு வந்துள்ள ‘மக்களுடன் முதல்வர்’ என்ற புதிய திட்டத்தின் நோக்கம், பொதுமக்களின் சேவைகள் பொதுமக்களுக்கு விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காண வேண்டும் என்பதுதான்.   அதன்படி இன்று (டிச.18) கோவை மாவட்டம் என்.என்.ஆர். கல்லூரி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவை மாநகரட்சி 27 […]

ஹிட்மேன் ரோகித் சர்மாவுக்கு சச்சின் டெண்டுல்கர் துரோகமா..?

ஐ.பி.எல். கிரிக்கெட் உலகில் யாருமே எதிர்பாராத அதிரடி திருப்பம் என்றால், அது இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகவும் பலமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து எடுத்துவிட்டு, அவருக்குப் பதிலாக குஜராத் அணியில் இருந்து வாங்கப்பட்ட  ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததுதான். இந்த விவகாரம் ஹிட்மேன் ரோகித் ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியைக் கொடுத்துள்ளது. இந்த மாற்றத்தை எதிர்பார்க்காத மும்பை அணியின் வீரர்களான சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்களும் அதிர்ந்துபோய் […]

ஒரே நாளில் 81 எம்.பி.க்கள் அவுட் – பா.ஜ.க. நாடாளுமன்ற ஜனநாயகம் சூப்பரு

தங்கள் சார்பில் கேள்வி எழுப்புவதற்காகத்தான் எம்.பி.க்களை மக்கள் தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்பதற்காக ஒரே நாளில் 81 எம்.பி.க்களை சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது பா.ஜ.க. அரசு. ’நாடாளுமன்றத்தில் இப்படியொரு அராஜகம் எப்போதும் நிகழ்ந்ததில்லை. இந்த நாட்டின் பாதுகாப்பிற்காக போராடுவதுதான் நாங்கள் செய்த குற்றம். மோடி அரசு இந்தியா கூட்டணி கட்சிகளை அச்சுறுத்தி பணியவைக்கலாம் என்று நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. நாடாளுமன்றத்தில் இருந்து இன்று நீங்கள் எங்களை நீக்கலாம். […]

பிரதமரை சந்திக்க நேரம் கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வெள்ள பாதிப்புகள் தொடர்பான நிவாரண நிதி வழங்க வேண்டி பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கோரியுள்ளார்.   தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அதன்படி கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பெருமழை வெள்ளத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகன மழை பெய்தது. இதில் ஏற்பட்ட பெரும் சேதத்தை மத்திய அரசு ஆய்வுக்குழுவை அனுப்பி […]

WKMA விருது வழங்கும் விழா! தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு!

வேர்ல்டு கராத்தே மாஸ்டர் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.   உலகம்  முழுவதும் 52 நாடுகளில் உறுப்பினர்களைக் கொண்டு உலகின் தலைசிறந்த கராத்தே மாஸ்டர் சங்கமாக விளங்கி வருவது வேர்ல்டு கராத்தே மாஸ்டர் அசோசியேஷன். கடந்த 4 ஆண்டுகளாக சேவை புரிந்து வரும் இதில் கடந்த 2 ஆண்டுகளாக கராத்தே மாஸ்டர்கள் மற்றும் வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கும் […]

அடடே, தமிழகம் மீண்டும் முதல் மாநிலம்… இந்தியா டுடே ஆய்வு ரிப்போர்ட்

இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் மொத்த மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கான பட்டியலில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து தமிழகம் 2022 ஆண்டுக்கு முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஸ்டேட் ஆப் ஸ்டேட்ஸ் என்ற பெயரில் மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதற்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.   இந்த ஆண்டு வெளியிட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1, […]