Share via:
வருகிற 2030ம் ஆண்டுக்குள் உலக பொருளாதார வரிசையில் இந்தியா 3வது இடத்தை பிடிக்கும் என்று சர்வதேச நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
உலக பொருளாதார வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து சீனா 2வது இடத்திலும், ஜப்பான் 3வது இடத்திலும், ஜெர்மனி 4வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரையில் உலக பொருளாதார வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் ஒன்று ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற 2030ம் ஆண்டுக்குள் இந்தியா உலக பொருளாதார வரிசையில் 3வது இடத்தை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ள இந்தியா, தற்போதைய (2023) ஆண்டிலும் நிலையான, வலுவான வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்துள்ளது.
இத்தகவலைத் தொடர்ந்து இந்திய பொருளாதார வல்லுனர்கள், தனியார் சர்வதேச நிறுவனம் கணித்துள்ள தகவலின் உண்மைத் தன்மை குறித்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.