News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

“மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் அடுத்த அரை மணி நேரத்தில் நிதி தருகிறோம் என்று ஒன்றிய அரசின் அமைச்சர் வெளிப்படையாகப் பேசினார் என்று தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியிருப்பது வைரலாக மாறியிருக்கிறது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று, “கடந்த மூன்று ஆண்டுகளில் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் ஆசிரியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கியுள்ளோம். மேலும் நகர்ப்புற , கிராமப்புற மாணவர்கள் மட்டுமின்றி மலைப்பிரசேதங்களில் உள்ள மாணவர்களுக்கும் கல்வி பயில முடியாத நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி என்ற முறையைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பி.எம் ஸ்ரீ திட்டத்தின் மூலம் புதிய கல்விக் கொள்கையில் இணைய மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என மத்தியக் கல்வித்துறை தெரிவிக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு  ஏற்றுக்கொள்ளாது.  நாங்கள் செய்த சாதனைகளைக் காட்டி நிதி கேட்கிறோம். ஆனால், பள்ளிக் கல்வித்துறையில் முன்னேறும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தருகிறது கடந்த ஆண்டுகளில் தமிழக அரசு கோரிய நிதியை விடக் குறைவான நிதியையே மத்திய அரசு கொடுத்திருக்கிறது. மத்திய அரசு நிதி வழங்காதது தமிழக அரசுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.  

இதற்கு தமிழிசை செளந்தரராஜன், ‘’தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும் மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.. புதிய கல்விக் கொள்கை கூட ஏதாவது ஒரு மொழி என்று தான் சொல்கிறது ஆனால் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மூன்றாவது மொழியாக ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா.?. எங்கள் பிள்ளைகளை பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்கள்.. தமிழகப் பிள்ளைகளின் தனியார் பள்ளிகளில் மும் மொழிக் கொள்கை அரசு பள்ளி பிள்ளைகளுக்கு இருமொழிக் கொள்கை என்ற பாகுபாடு சரியா? ஏழைக் குழந்தைகளை இப்படி வஞ்சிக்கலாமா?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

முதல்ல நிதியைக் கொடுங்கம்மா. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link