Share via:
எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறியிருப்பத்தாவது .
அம்மா ஆட்சியில் மக்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்ற ஒரே காரணத்திற்காக , திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 42 மாதங்களில் , பல திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யததால் , அதை முழுமையாக முடிக்கப்படாமலும் போடப்பட்டுள்ளன .
செயல்படுத்தாத திட்டங்கள் :-
* விழுப்புரத்தில் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
* காவிரியின் குறுக்கே நஞ்சை – புகளூர் கதவணையுடன் கூடிய தடுப்பணை காலதாமதமாக பணிகள் நடைபெறுகின்றன.
* விழுப்புரம் மாவட்டம் , மரக்காணம் ஒன்றியம் , கூனிமேடு கிராமத்தில் கடல் நீர் குடிநீராக்கும் திட்டம் ரூ. 1,500 கோடி மதிப்பீட்டிலான திட்டம் கைவிடப்பட்டுள்ளது .
* அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தவில்லை .
* தலைவாசல் கால்நடைப் பூங்கா – திறக்கப்படவில்லை.
* காவிரி உபரி நீரினை நிரப்பும் திட்டம் செயல்படுத்தவில்லை .
விவசாயிகள் , பொதுமக்கள் என்று அனைவருக்கும் பயன்படும் திட்டங்களை இந்த திராவிட மாடல் அரசு மேற்கொள்ளவில்லை .