Share via:
தென்மேற்கு மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் வளிமண்டல சுழற்சி நிலவும் நிலையில் , தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் , புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் , இடி , மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெருவித்துருத்தது .
இதன் தாக்கம் காரணமாக இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
நேற்றைய நிலவரப்படி அந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் வரை பரவியுள்ளது . அதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .