News

கன்னடர் மூலம் காவிரிக்கு விஜய் ராஜதந்திரம்.? வெங்கட் நியமன பஞ்சாயத்து

Follow Us

அடுத்து நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் 2 சீட் கேட்டு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் அடம் பிடித்து ஜெயித்துக் காட்டுவார் என்று இப்போதே கட்சிக்குள் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். அதன்படி நேற்றைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸை வளர்ப்பதற்கு இரண்டு முக்கிய நபர்களுக்குப் பதவி கொடுத்திருக்கிறார் ராகுல் காந்தி. இதுகுறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், ‘’பிரவீன் சக்கரவர்த்தி அவர்களுக்கு தமிழக வெற்றி கழகம் மூலம் ராஜ்யசபா பெற்றுக் கொடுத்தார் ராகுல். அதேபோல் இப்போது மாணிக்க தாகூரை காங்கிரஸ் உடைய தலைவராக நியமித்திருக்கிறார்கள்.

மாணிக்க தாகூர் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர். தென் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் உடைய ஓட்டுகளை ஒருங்கிணைப்பதற்காகவே பாஜகவிற்கும் முக்குலத்தோர் சமுதாயம் வாக்களிக்கவில்லை அதைப் போன்று அதிமுகவிற்கும் வாக்களிக்கவில்லை. புதிதாக வந்துள்ள தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்து தென் மாவட்டத்தில் காங்கிரசை பெரிய அளவில் வளர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

இப்போது தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மாணிக்கம் தாகூர். நடக்கயிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் தவெக நிற்க வேண்டும் என்று விஜய் ஆசைப்படுகிறார். ஆனால், கடந்த தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் காங்கிரஸ் நின்றது. எனவே, அதோடு சேர்த்து மேலும் ஒரு தொகுதி வேண்டும் என்று விஜய்க்கு நெருக்கடி கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது.

விஜய்யிடம் பாய்வாரா அல்லது பம்முவாரா என்பதை விரைவில் பார்த்துவிடலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link