News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

காசாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாக வெளியான அதிர்ச்சி தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் மூண்ட போர் இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் தீவிரம் காட்டி வரும் இஸ்ரேல் ராணுவம் காசாவில் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரையில் காசாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் அதில் அதிகபட்சம் கொல்லப்பட்டது குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா. வெளியிட்டது.

போர் நிறுத்த தீர்மானத்தையும் மறுத்த இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்தே தீருவோம் என்று தீவிர  தாக்குதல் நடத்தி வருகிறது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசாவில் குண்டு மழை பொழிந்த நிலையில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் அங்கே உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி மனிதநேயம் உலகத்தில் இன்றும் இருக்கிறதா என்ற பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link