News

Follow Us

தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் லண்டனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகையை கடந்த 12ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டினரும் கோலாகமாக கொண்டாடினர். அதேபோல் லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குடும்பத்தினரும் தீபாவளி பண்டிகையை கடந்த ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக கொண்டாடினார்கள்.

தீபாவளி பண்டிகையன்று இரவு 10.30 மணியளவில் இவர்களின் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு 2 மாடிகளிலும் தீ மளமளவென பரவியது. கரும்புகை சூழ்ந்த நிலையில் தீயில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து  தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நடத்திய மீட்பு நடவடிக்கையில் சீமா ராத்ரா என்ற பெண், தனது 3 குழந்தைகளுடன் உயிரிழந்த நிலையில் மீட்டனர். படுகாயங்களுடன் உயிர் தப்பிய சீமாராத்ராவின் கணவரான ஆரோன் கிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link