தயாநிதி டிஸ்மிஸ்… செங்ஸ் வருகை. அடித்து ஆடும் இபிஎஸ்

கடந்த சில தினங்களாகவே ஆளும் தி.மு.க.வும் ஸ்டாலினும் கடுமையாக பின்னடைவை சந்திக்கும் நிலையில் அ.தி.மு.க.வுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவு பெருகிவருகிறது. மா.செ. கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்துகொண்டதை அடுத்து ஆளுமையாக தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. செங்கோட்டையன் விருந்துக்கு வராத நிலையில் நேற்றைய மா.செ. கூட்டத்தில் அவர் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கம் போல் செங்கோடையன் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ‘கூட்டணி முடிவு செய்யும் அதிகாரத்தை […]
விஜய் நெக்ஸ்ட் ஷோ ஆரம்பம். பூத் லெவல் ஏஜென்ட் கருத்தரங்கம்

இன்னும் இரண்டு மாதங்களில் அரசியல் சூறாவளி, தேர்தல் சுற்றுப் பயணம் என்றெல்லாம் விஜய் வருகையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், பூத் லெவல் ஏஜெண்ட் கருத்தரங்கள் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இது குறித்து விஜய் ரசிகர்கள், ‘’நாளையும் நாளை மறுநாளும் கோவையில் தவெக பூத் லெவல் ஏஜண்டுகள் கருத்தரங்கம் நடத்துகிறோம். பொதுவாக 2 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் ஒரு சட்டசபை தொகுதியில் 200 வாக்குசாவடிகள் (Booths) இருக்கும். (1000 பேருக்கு ஒரு Booth) BLA1,BLA2 பாரங்களை […]
கருணாநிதிக்குப் பல்கலைக்கழகம். டாக்டர் ராமதாஸின் தேர்தல் ஜால்ரா

கலைஞர் கருணாநிதி பெயரில் தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகம் இல்லையேஎன்று பா.ம.க.வின் ஜிகே மணி, வருத்தப்பட்டதைப் பார்த்து வைகோ, திருமாவளவன் ஆகியோர்பதட்டத்திற்கு ஆளாகிவிட்டனர். கூட்டணிக் கட்சியினராக இருந்தும் தங்களுக்கு இப்படி ஜால்ராபோடத் தெரியவில்லையே என்று வருந்தும் நிலைக்கு ஆளாகிவிட்டார்கள். இதையடுத்து கூட்டணிமாற்றம் உண்டா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் பேசிய ஜி.கே.மணி சிறப்பு கவனம் ஈர்ப்புத் தீர்மானம்கொண்டுவந்தார் அவர், ‘’கலைஞருக்கு “முத்தமிழ் அறிஞர்” எனும் பட்டத்தை அளித்தவன்நான் தான் என்றும் ஜி.கே. மணி பெருமிதம் தெரிவித்தார். மேலும் […]
பாகிஸ்தான் மீது நேரடி அட்டாக்..? மோடி கூட்டத்தில் அதிரடி முடிவுகள்

காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா அமைப்பே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவு இருப்பதையடுத்து மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரலாற்றிலேயே முதன்முறையாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தொடங்கி பாகிஸ்தானில் பாயும் சிந்து நதி நீர் என்பது பாகிஸ்தான் நாட்டின் முக்கிய ஆதாரம் ஆகும். அந்நாட்டில் உள்ள 16 மில்லியன் ஹெக்டேர், […]
செங்கோட்டையன் மீண்டும் போர்க்கொடி. விருந்து மீட்டிங்கில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

பாஜகவுடன் கூட்டணி உறுதியான பிறகு, இது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இந்த விருந்து நிகழ்வு தள்ளிப்போகும் என எதிபார்க்கப்பட்ட நிலையில், நடத்தப்பட்டதும், இந்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணிப்பு செய்திருப்பது கட்சிக்குள் மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்கியுள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி கொடுத்த விருந்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன், […]
பஹல்காம் தீவிரவாதிகள் அடையாளம் கண்டுபிடிப்பு… கோட்டை விட்ட அமித்ஷா பதவி விலகுவாரா..?

ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் ராணுவ வீரர்கள் போல உடை அணிந்து வந்த 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை மிரட்டவும், விரட்டவும் அமித்ஷா கவனம் செலுத்தியதால் இப்படிப்பட்ட கொடூர தாக்குதல் நடந்துள்ளது, அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில் உல்லாசமாக இருந்த சுற்றுலாப் பயணிகளை ராணுவ உடையில் […]
பழனிவேல் தியாகராஜனின் டம்மி பதவிக்கும் ஆபத்து… எப்போது ராஜினாமா..?

அதிகார பலத்துடன் வலம் வந்த பிடி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோ விவகாரத்தினால் அந்த பதவியை இழந்துவிட்டார். இதையடுத்து டம்மியாக ஐ.டி. மினிஸ்டர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த டம்மி பதவிக்கும் ஆபத்து வந்திருக்கிறது. சட்டமன்றத்தில் தன்னுடைய கூடலூர் தொகுக்கு டைடல் பார்க் அமைத்துத் தர வேண்டும் என்று அ.தி.முக. சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன் ஒரு கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த பிடிஆர். பழனிவேல் ராஜன், ‘’யாரிடம் நிதியும், திறனும்,அதிகாரமும் இருக்கிறதோ அவரிடம் கேளுங்கள்” என்று […]
எடப்பாடி பழனிசாமியிடம் சரண்டரான நயினார்… இனி இரட்டைக் குழல் துப்பாக்கி..?

கூட்டணிக் கட்சிகளாக மாறிய பிறகும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இணைந்து செயல்படவில்லை. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் நயினார் நாகேந்திரன். தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இன்றைய தினம் எடப்பாடி பழனிசாமியை அவரது அறையில், நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார். அவருடன் காந்தி எம்.எல்.ஏ. மட்டும் கலந்துகொண்டார். சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அறையில் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, […]
திருமாவுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ஸ்டாலின்… ராமதாஸ் திட்டங்கள் தவிடுபொடி

டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையிலான லடாயை ஒட்டி பல்வேறு யூகங்கள் வெளியாகின. திமுக அல்லது அதிமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைப்பதற்கு விரும்புகிறார் என்றே சொல்லப்பட்டது. பா.ஜ.க. மூலம் அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதை விட, நேரடியாக கூட்டணி வைப்பது அல்லது தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவந்தால், இதன் மூலம் பா.ம.க.வுக்கு டிமாண்ட் அதிகரிக்கும் என்றும் அதற்காகவே இந்த நாடகம் என்றும் கூறப்பட்டு வந்தது. இதையடுத்தே திருமாவளவனுக்கு தி.மு.க. கூட்டணியில் இடம் இல்லை என்றும் யூகங்கள் கிளம்பின. […]
வைகோவுக்குத் தெரியாமல் துரை வைகோ ராஜினாமா..? மல்லை சத்யா வெளியேற்றப்படுவாரா..?

தலைவர் வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் கட்சியில் மறைமுகமாக ஒருவர் ஈடுபடுகிறார். எனவே கட்சிப் பதவியில் இருந்து வெளியேறுகிறேன் என்று துரை வைகோ எம்.பி. திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த தகவல் எனக்குத் தெரியாது என்று வைகோ அதிர்ச்சி அடைந்திருக்கும் நிலையில், மல்லை சத்யாவின் உள்குத்துவே காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய அறிக்கையில் துரை வைகோ, ’’அரசியல் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல இருந்தவன் நான் என்பதை அனைவரும் அறிவர். 2018 ஆம் ஆண்டு […]

