டிரெண்டிங் ஆகும் விஜய் மாநாடு… பாஜகவுக்கு பதில் சொல்வாரா..?

நடிகர் விஜய் இன்று நடத்தும் இரண்டாவது மாநில மாநாடு மிகப்பெரும் அளவில் டிரெண்டிங் ஆகிவருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரையை நோக்கி ரசிகர்கள் ஓடோடி வருகிறார்கள். பத்திரிகை, மீடியா, சமூகவலைதளங்களில் இதுவே டிரெண்டிங் ஆகியுள்ளது. மதுரை பாரபத்தியில் இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமாக முடிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணி வரை மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், காலையிலே கூட்டம் […]
விஜய் மாநாட்டுக்கு வித்தியாச அழைப்பு. சூப்பர் புரோ

குடும்பத்தோடு வாருங்கள், கூட்டம் கூட்டமாக வாருங்கள் என்றெல்லாம் மாநாட்டுக்கு அழைப்பு விடப்படுவது சகஜம். இந்நிலையில் வீட்டிலிருந்து மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பாருங்கள் என்று விஜய் விட்டிருக்கும் அறிக்கை கவனிக்கத்தக்கதாக மாறியிருக்கிறது. 21ம் தேதி நடைபெறும் மாநாட்டையொட்டி நடிகர் விஜய், ‘’தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், […]
ஆம்புலன்ஸ் டிரைவரை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி..? திமுகவின் தில்லுமுல்லு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கலசப்பாக்கம், போளூர், அணைக்கட்டு தொகுதியில் மக்களை சந்தித்துப் பேசினார். அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே குழுமியிருந்த மக்களிடம் இபிஎஸ் எழுச்சியுரை நிகழ்த்தத் தொடங்கிய நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதை பார்த்தவுடன் எடப்பாடி பழனிசாமி கோபமாகிவிட்டார். ஏனென்றால், அவர் ஏந்தெந்த தொகுதிகளில் பேசத் தொடங்கினாலும் அங்கே இடையூறாக ஆம்புலன்ஸ் வந்துவிடுகிறது. ஆகவே எடப்பாடி, ‘’நான் தொடர்ந்து பல கூட்டங்களில் கவனித்து வருகிறேன். கூட்டத்துக்கு நடுவில் வேண்டுமென்றே ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு […]
அன்புமணியை அவுட் ஆக்குவாரா டாக்டர் ராமதாஸ்…? பொதுக்குழு மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியில் முட்டல் மோதல் நடைபெற்று வருகிறது. அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் தினம் ஒரு திருப்பம் நடக்கிறது. அந்த வகையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அன்புமணி குரூப்பை அலறவிட்டுள்ளது. புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பட்டானூரிலுள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4 […]
சி.பி.ஆருக்கு திமுக ஓட்டு போடுமா..? மோடியின் தேர்தல் நாடகம்

கடந்த வாரம் ஸ்டாலினை சந்தித்துத் திரும்பிய சிபி ராதாகிருஷ்ணன் இப்போது துணை ஜனாதிபதியாக நிறுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பது தமிழக அரசியலை குலுக்கியிருக்கிறது. இது குறித்து பேசும் பாஜகவினர், ‘’தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் உச்சபட்ச அங்கீகாரம் அளிக்கும் பாஜக. பொதுவாழ்வில் அனைவரும் போற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் பாரத நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்பது நம் அனைவருக்கும் பெருமை. அரசியல் வேறுபாடுகள் பாராட்டாமல் தமிழ்நாட்டின் அனைத்து எம்பிக்களும் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டியது கட்டாயம். மாண்புமிகு அப்துல் கலாம் அவர்களை ஜனாதிபதியாக கொண்டு வந்ததும் […]
மேடையிலிருந்து குதித்து விஜய் ரசிகரை அடித்த சீமான்..? குடி போதையா..?

சீமான் கூட்டத்தில் தளபதி, தளபதி என்று விஜய் பெயரைக் கூறியவரை, மேடையில் இருந்து இறங்கிவந்து அடித்த சம்பவம் செம வைரலாகிவருகிறது. குடி போதையில் சீமான் இப்படி செய்திருப்பதாக விஜய் கட்சியினர் செய்தி பரப்பிவருகிறார்கள். சீமான் பேசிக்கொண்டு இருந்த நேரத்தில் டிவிகே, டிவிகே என்று சிலர் கத்தியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பேசியசீமான், ‘புலி வேட்டைக்குச் செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள், ஓரமாக போய் விளையாடுங்கள், குறுக்கே வராதீர்கள்’ என்று பேசியிருந்தார். […]
தேர்தலுக்குத் தயாராகும் பாஜக. முதல் விக்கெட் ஐ.பெரியசாமி… அடுத்தது நேரு..?

வரும் சட்டமன்றத் தேர்தலை பாஜக வித்தியாசமான பாணியில் அணுக இருப்பதாக சொல்லப்படுகிறது. டெல்லி பாணியில் முக்கியமான திமுக புள்ளிகளை எல்லாம் தேர்தல் நேரத்தில் ஜெயிலுக்குள் அனுப்பும் திட்டம் தயாராகிறது. அந்த வகையில் மூன்று முக்கியப் பிரமுகர்களை சிறைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்களில் முதல் நபராகச் சிக்கியிருக்கிறார் ஐ.பெரியசாமி. ஏற்கெனவே செந்தில்பாலாஜி வசமாக சிக்கியிருக்கிறார். அடுத்தபடியாக நேருவும் மாட்டுவார் என்று சொல்லப்படுகிறது. இப்போதுஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாவட்டத்தில் செல்வாக்குடன் இருக்கும் பெரியசாமி […]
ஆளுநர் ஆர்.என்.ரவி பார்ட்டியில் விஜய்..? பட்டமளிப்பு விழாவில் அவமானம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி 739 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெற வந்திருந்த நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவி வி.ஜீன் ஜோசப் ஆளுநரிடம் பட்டம் பெற விரும்பவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து பட்டச் சான்றிதழை துணைவேந்தரே கொடுத்தார். பின்னர் ஜீன் ஜோசப் கூறும்போது, “தமிழுக்கும், தமிழக […]
கஞ்சாவுக்கு அடுத்து நாட்டு வெடிகுண்டு…. எடப்பாடி கடுமையான குற்றச்சாட்டு

தமிழகத்தில் எங்கெங்கும் கஞ்சா, போதைப் பொருட்கள் கிடைக்கிறது. இதனால் நாடெங்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள் நடந்துவருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துவருகிறார். இந்நிலையில் மாணவர்கள் கத்தி, அரிவாள் என்று வன்முறையில் இறங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று, ‘’தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், […]
வாழும் ஜெயலலிதாவா பிரேமலதா..? கப்சிப் அதிமுக

எங்களைத் தவிர வேறு யாரும் விஜயகாந்த் போட்டோவை, வீடியோவை பயன்படுத்தக்கூடாது. அப்படி விஜய்காந்த் படத்துடன் போஸ்டர், பேனர் இருந்தாலே உடனடியாக வழக்கு போடுவோம் என்று பிரேமலதா பேசியிருந்தார். அவரை ஜெயலலிதா போன்று சித்தரிப்பு செய்திருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் பிரேமலதா. இதையடுத்து அங்கேயும் பேரம் பேச வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படும் நிலையில், ஜெயலலிதாவுடன் பிரேமலதா உள்ளது போன்ற படத்தை திடீரென தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் பதிவிட்டுள்ளார். வேண்டுமென்றே இந்த படம் […]

