News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

எடப்பாடியிடம் செங்கோட்டையன் சரண்டர்… ? சட்டமன்றத்தில் கருப்புப்பட்டை

அதிமுகவில் இருந்து அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து தூக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று மற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போலவே கருப்புப்பட்டை அணிந்து சட்டமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவகாரம் கட்சியில் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கியது. முதல் நாள் கரூர் துயரத்தில் பலியான 41 பேர், மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி […]

விஜய்யுடன் மல்லுக்கட்டும் முரசொலி… த.வெ.க. கொல்லுமா..?

இன்று நடிகர் விஜய் பற்றி திமுகவின் அதிகாரபூர்வ இதழான முரசொலியில் காட்டமான ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், 41உயிர்­க­ளைக் கொன்ற விஜய் பனை­யூ­ரில் பதுங்­கிக் கொண்டு, ‘நீதி வெல்­லும்’ என்று டுவிட்­டர் போடு­கி­றார். த.வெ.க. கொல்­லும்! ஆனால் நீதி வெல்­லும் என்று நேரடியாக குற்றம் சாட்டியுள்ளனர். அந்த தலையங்கத்தில், ‘’மீட்­டிங் என்ற பெய­ரால் சூட்­டிங் நடத்தி விட்டு, சினி­மா­வில் ‘சும்மா’ கொல்­வ­தைப் போல, நிஜத்­தில் கொன்று விட்டு, லைட்­டைப் போட்டு ஆப் செய்து விளை­யா­டும் சேட்­டிஸ் மனி­த­னின் […]

சட்டமன்றத்தில் அன்புமணி பாமக தர்ணா போராட்டம். திமுக யார் பக்கம்..?

டாக்டர் ராமதாசுடன் மல்லுக்கட்டுவதையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் அன்புமணி ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்று சட்டமன்றத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதாவது, பாமக சட்டமன்றக் குழு தலைவர் பதவியில் இருந்து ஜிகே மணியை நீக்க வலியுறுத்தி சட்டப்பேரவை வளாகத்தில் பாமக எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவக்குமார் ஆகியோர் திடீர் போராட்டம் நடத்தினார்கள். இன்று சட்டப்பேரவை சரியாக காலை 9.30 மணிக்கு தொடங்கியதும், திருக்குறளை வாசித்த சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, தொடர்ந்து மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களான புரட்சிமணி, […]

பாஜகவுடன் விஜய் கூட்டணி உறுதியா..? வில்சன் இப்படி மாட்டிக்கிட்டாரே…

கரூர் விவகாரம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது திமுகவுக்கு மிகப்பெரும் தோல்வி என்று விஜய் கட்சியினர் கொண்டாடிவருகிறார்கள். அதேநேரம், விஜய் வசமாக பாஜகவிடம் சிக்கிவிட்டார். ஒரே ஒரு சிபிஐ வழக்கு வைத்து அன்புமணியை ஆட்டிவைப்பது போன்று விஜய்யைக் கூட்டணிக்கு இழுத்து வளைத்துவிடுவார்கள் என்று திமுகவினர் கிண்டல் செய்கிறார்கள். அதேநேரம், திமுகவில் வில்சனுக்கு செம டோஸ் விழுந்துவருகிறது. நீதிமன்றத்தில் மிகத்தெளிவாக இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த தீர்ப்புகள் எல்லாம் மாறலாம் என்று தெரிவித்தார். விலசன் இப்படி பொய் பேசலாமா […]

விஜய்க்கு சிபிஐ ரிலாக்ஸ்… சவுக்குடன் மோதும் விஜய் தொண்டர்கள்

கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது விஜய் ரசிகர்களை ரிலாக்ஸ் ஆக்கியுள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை முழுக்க முழுக்க விஜய் பக்கமே தவறு என்று குற்றம் சாட்ட வாய்ப்பிருக்கும் நிலையில் சிபிஐ வசம் விசாரணை போயிருப்பது நல்லது என்றே கருதுகிறார்கள். சிபிஐ விசாரணை கிடைக்கும், இதன் மூலம் பாஜகவுக்கு அடிமையாக விஜய் மாறவேண்டியிருக்கும். வேறு வழியில்லாமல் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தொடந்து சவுக்கு சங்கர் பேசிவருகிறார். அதோடு, வரும் […]

பாஜக மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா… மோடியை மதிக்காத அதிமுக..?

நயினார் நாகேந்திரன் தொடங்கியிருக்கும், தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’ யாத்திரை நேற்று மதுரையில் தொடங்கியது. இந்த மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்கள் வைக்கப்பட்டிருப்பது இரண்டு கட்சிக்குள்ளும் கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த யாத்திரை குறித்து நயினார் நாகேந்திரன், ‘’தமிழகத்தில் நடைபெறும் கொடுங்கோல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, நமது “தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்” துவங்கி விட்டது. ஆட்சியை காக்க கட்டுக்கதைகள் பல கட்டவிழ்த்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் விடியாத ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து […]

தனியே தன்னந்தனியே நயினார் நாகேந்திரன் பயணம். குஷியில் அண்ணாமலை

அண்ணாமலை பாணியில் பிரமாண்ட ரோடுஷோ நடத்த ஆசைப்பட்டார் புதிய தலைவர் நயினார் நாகேந்திரன். விஜய் விவகாரத்தினால் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி எந்த கூட்டணிக் கட்சிகளும் கலந்துகொள்ளாமல் தன்னந்தனியே செல்லவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் நயினார் நாகேந்திரன் மதுரையில் இன்று தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். தொடர்ந்து, 13-ம் தேதி சிவகங்கை, 14-ம் தேதி […]

விஜய்க்கு மீண்டும் சிக்கல்..? தள்ளிப்போகும் கரூர் விசிட்

கரூர் துயர சம்பவத்துக்கு விஜய் நேரில் சென்று ஆறுதல் அளிப்பார் என்று சொல்லப்பட்டுவந்தது. அக்டோபர் 13ம் தேதி என்று முதலில் நாள் குறிக்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 17 என்று சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அந்த தேதியிலும் குழப்பம் இருப்பதாக கூறப்படுவதால் தள்ளிப்போவது உறுதியாகிறது. கரூருக்கு நேரில் செல்லும் விஜய்க்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டுக்குச் செல்வது நெரிசலை உருவாக்கிவிடும் […]

திமுகவின் தேர்தல் பிரசாரத்துக்கு அச்சாரம்… கிராம சபை கூட்டத்துக்குப் புது பேர்

இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 480 ஊராட்சி அமைப்புகளில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 ஆயிரம் கிராம சபை கூட்டங்களில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றவுள்ளார். வரும் 2026 தேர்தலுக்குப் பயன்படுத்தும் வகையில், இந்த கூட்டத்தை ஸ்டாலின் பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்றைய கிராமசபைக் கூட்டங்களில் கிராம மக்களின் அத்தியாவசிய தேவைகள், கிராமத்தின் நிதி மற்றும் பொது செலவினம் குறித்தும் டெங்கு பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தாயுமானவர் திட்ட […]

விஜய் தலைமறைவுக்கு உதயநிதி கிண்டல்… பால்டாயில் சர்ச்சை

சனிக்கிழமை என்றாலே விஜய் வெளியேவரும் தினமாக இருந்துவந்தது. விஜய் வெளியே வரும் சனிக்கிழமை தோறும் தன்னுடைய ரவுடி என்று பெயர் சூட்டப்பட்ட நாயுடன் ஒரு போட்டோ போட்டு விஜய் ரசிகர்களுடன் வம்பிழுத்து வந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் வெளியே வருவதில்லை. ஆனாலும், நாய் போட்டோ போடுவதை உதயநிதி நிறுத்தவே இல்லை. அதுவும் இன்றைய போட்டோ விஜய் ரசிகர்களை ரொம்பவே டென்ஷன் ஆக்கியுள்ளது. அதாவது நாயின் தலைக்குப் பின்னே தன்னுடைய தலையை […]