News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

விஜய் ஜெயிலுக்குப் போவாரா..? சிக்கலாகும் ரேம்ப்வாக் வழக்கு

மருத்துவமனையில் இருக்கும் விஜய் ரசிகர் காவல் நிலையத்தில் அளித்திருக்கும் புகாரை அடுத்து விஜய் மற்றும் அவரது பவுன்சர்களுக்கு கைதாகும் சிக்கல் உருவாகியிருக்கிறது. கடந்த 21ஆம் தேதி மதுரையில் நடந்த விஜய் மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 30 மீட்டர் தூரத்திற்கு போடப்பட்டிருந்த ராம்ப் வாக் மேடையில் விஜய் நடந்த வந்த போது, இளைஞர்கள் பலரும் ராம்ப் வாக் மேடையில் ஏறி விஜய்க்கு துண்டை அணிவிக்கவும் கட்டிப்பிடிக்கவும் முயன்றனர். இந்த ரசிகர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அப்படி […]

அமைச்சர் நேரு மீது நில மோசடி குற்றச்சாட்டு. திருச்சியில் எடப்பாடி அட்டாக்

திருச்சி பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் நேரு செய்திருக்கும் கோல்மால்களை எடப்பாடி பழனிசாமி அம்பலப்படுத்தியிருக்கிறார். நேற்று திருச்சி புதூர் பிஷப் சாலையில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி எழுச்சியுரையாற்றினார். அப்போது அவர், “அமைச்சர் நேரு  இந்த தொகுதியின் எம்.எல்.ஏ..  தமிழ்நாட்டில் இவருடைய இலாகாவில்தான் நிறைய பிரச்னைகள். சொத்துவரி ஏற்றிவிட்டனர்.  குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட […]

வரலாறு மட்டுமல்ல, அறிவியலையும் மாத்துறாங்க… பாஜக விண்வெளி லீலைகள்

இஸ்லாம் வழிபாட்டுத்தலங்களை இடித்துவிட்டு, அங்கெல்லாம் இந்து கோயில்களைக் கட்டுவதில் பாஜக தீவிரம் காட்டிவருகிறது. அதேபோல், காந்திக்கு இணையாக கோட்சே புகழ் பாடப்படுகிறது. சாவர்க்கருக்கு என்று தனியே வரலாறு உருவாக்கப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடம் பாஜக அமைச்சர் கூறிய அறிவியல் சமாச்சாரம் எக்கச்சக்க சர்ச்சையை எழுப்பியிருக்கிறது. அதாவது, முதன்முதலில் விண்வெளிக்குப் போனவர் அனுமன் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., ‘முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு […]

ஆட்டோவுக்கு மானியம் தரும் எடப்பாடி… மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு அமித்ஷா

எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளும் எழுச்சிக் கூட்டங்களில் ஏதேனும் ஒரு தேர்தல் அறிவிப்பு வெளியிடுகிறார். அந்த வகையில் ஆட்டோவுக்கு மானியம் தரப்படும் என்று அறிவிப்பு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று தொடர்ந்து குண்டு போட்டுக்கொண்டே இருக்கிறார். இது குறித்து பேசும் அதிமுகவினர், ‘’அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே வருகிறார். எடப்பாடி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும் என்று சொல்கிறார், இதை தெளிவுபடுத்த வேண்டும். நீங்கள் அமைக்கிற தனிப்பெரும்பான்மை ஆட்சியில் […]

விஜய் மாநாட்டில் இவ்வளவு சேதாரமா..? ரசிகர்கள் செலவு எவ்வளவு தெரியுமா..?

முதல்வர் ஸ்டாலின் துண்டு சீட்டு பார்த்து படிப்பார். அதேபோல் விஜய் ஏ4 சீட் பார்த்து படித்தது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. எல்லாவற்றையும் எழுதி வைப்பது பிரச்னையில்லை, இதையுமா என்று அவரது ரசிகர்களே ஆதங்கப்படுகிறார்கள். ஏனென்றால், அவர் எழுதி வைத்தது இதுதான். மதுரை கிழக்கு வேட்பாளர்: விஜய் மதுரை மேற்கு வேட்பாளர்: விஜய் மதுரை வடக்கு வேட்பாளர்: விஜய் 234 தோகுதிகளிலும் வேட்பாளர்: விஜய். இதையுமே எழுதிப்படிக்க வேண்டும்? அதேநேரம், விஜய் மாநாட்டில் எவ்வளவு சேதாரம் என்று ஒரு […]

விஜய் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட்.. ஆட்டோ சின்னத்துக்கு மனு..?

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அழுத்தி அழுத்தி சொன்ன பிறகும் எந்தக் கட்சியும் முன்வரவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு 70 சீட் என்று பேச்சுவார்த்தை நடக்கிறது என்று விஜய் கட்சியினர் குஷியாக இருந்தனர். ஆனால், காங்கிரஸ் பக்கமிருந்து எந்த அசைவும் இல்லை என்றதும் விஜய் டீம் செம அப்செட். இப்போது விஜய் எதிர்பார்ப்பது எல்லாமே அவருக்கு ஆட்டோ சின்னம் கிடைக்குமா என்பதுதான். இது குறித்து பேசும் விஜய் கட்சியினர், ‘’சிறிது காலம் முன்னர்வரை தேர்தல் ஆணையம் […]

அண்ணாமலை இமேஜ் டோட்டல் டேமேஜ்… சிங்கத்துக்கு பல்லைப் புடுங்கிட்டாங்க

எடப்பாடியை முதல்வர் பதவிக்கு வரவைப்பதற்கு நான் வரலைங்கண்ணா… எனக்கு பாஜகதான் முக்கியம் என்றெல்லாம் வீரவசனம் பேசிய அண்ணாமலை நிலவரம் இப்போது ரொம்ப ரொம்ப கேவலமாகிவிட்டது. எடப்பாடியை முதல்வராக்குவோம் என்று பேசிய வீடியோவைக் கேட்டு அவரது ஆதரவாளர்கள் அதிர்ந்து நிற்கிறார்கள். தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக பூத் கமிட்டி கூட்டத்தில் பேசினார். அப்போது அதிமுக கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக பாஜகவினர் கடுமையாக உழைப்போம் என்று பேசியிருக்கிறார். இப்போதுதான் அண்ணாமலைக்கு புத்தி வந்திருக்கிறது […]

தோசை மாவுக்கும் ஜிஎஸ்டி…? வரிவிகிதத்தில் கிடுகிடு மாற்றம்…

இந்தியாவில் நடுத்தர மற்றும் குறு தொழில்களை அழித்தொழித்த பெருமை ஜிஎஸ்டிக்கு உண்டு. இப்போது ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்கும் அமைச்சர்கள் குழு ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி மறு சீரமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. தற்போதைய 12% மற்றும் 28% விகிதங்களை நீக்கி, இரண்டு விகிதங்களாக மாற்றியமைக்க ஒன்றிய அரசின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. புதிய அமைப்பு: அத்தியாவசிய பொருட்களுக்கு 5%, சாதாரண பொருட்களுக்கு 18%, மற்றும் சொகுசு பொருட்கள் / தீமை பொருட்களுக்கு 40% விகிதம். 12% விகிதத்தில் […]

அமித்ஷா முன்னிலையில் சேரப்போகும் திமுக விஐபி. அதிமுகவில் எத்தனை சீட்..?

தமிழகம் வரும் உள்துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய மேலிடத் தலைவருமான அமித்ஷா, இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி முதல் மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று நெல்லை வருகிறார். இந்த சமயத்தில் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுகவை அரியணையில் இருந்து வீழ்த்துவோம் என்று அதிமுக – பாஜக கூட்டணி கட்சியினர் ஆவேசமாக பேசி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

திருமாவளவன் விலை 50 கோடி ரூபாய்..? போட்டுக்கொடுத்த முத்தரசன்

கடந்த தேர்தலில் திமுகவிடம் இருந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் நிதி வாங்கியதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைத்துவருகின்றன. இந்நிலையில் நான் மட்டுமா வாங்கினேன் வைகோ, திருமாவும் வாங்கினார் என்று போட்டுக் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய முத்தரசன், ‘’திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலுக்கு பணம் கொடுத்தது. கையில் கொடுக்கவில்லை, நடு ராத்திரியில் கொடுக்கவில்லை, திரை மறைவில் கொடுக்கவில்லை. திமுகவின் வாங்கி கணக்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு […]