தீபாவளி எதிரொலி: 300க்கும் மேற்பட்டோரின் கண்பார்வை பாதிப்பு!

கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இருப்பினும் தீபாவளி பண்டிகைக்கு முன்கூட்டியே பலர் பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதோடு தீபாவளி முடிந்தும் நவம்பர்3ம் தேதி வரை ஆர்வமாக பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பட்டாசு வெடிப்பதற்கான பல வழிகாட்டுதல்கள் மற்றம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், அதை மீறி பலர் பட்டாசு வெடித்தபோது விபத்துகளில் சிக்கின அசம்பாவிதங்களும் அரங்கேறின. அதன்படி மதுரை மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி முதல் 3ம் தேதிவரை […]
இளைஞர்களுக்கு 1 லட்சம் பதவிகள்…? புதிய கூட்டணி.. நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தி.மு.க.வினர் உதயநிதியை களத்தில் இறக்கி இளைய தலைமுறையைக் கவரும் முயற்சியில் இருக்கிறார்கள். விஜய் ஒரு பக்கம் களத்தில் இறங்கி புதிய வாக்காளர்களை இழுக்கிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இளைஞர்களுக்கு 1 லட்சம் பதவிகள் வழங்கும் வகையில் புதிய அணிகள் அறிவிக்கப்படுவதாகத் தெரிகிற்து. 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னமும் 15 மாதங்கள் உள்ளது. இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. கிளைக் […]
தைரியம் இருந்தா காவிரி பிரச்னையை பேசு ப்ரோ… விஜய்யை வம்புக்கிழுக்கும் சீமான் தளபதிகள்

விஜய்க்கு எதிராக சீமான் கடுமையான விமர்சனம் முன் வைத்த பிறகும் விஜய், ‘யாரையும் கண்டுக்காதீங்க’ என்று கூறிவிட்டார். ஆனாலும், விஜய் ரசிகர்கள் ஆங்காங்கே சீமான் எதிர்ப்பைக் கையிலெடுத்து வம்பிழுத்து வருகிறார்கள். சீமானை எதிர்த்து போஸ்டர் அடிக்கிறார்கள். இதையடுத்து சீமானின் ஆட்களும் மீண்டும் விஜய்யுடன் மல்லுக்கட்டுகிறார்கள். ’’ஸ்டாலின் துண்டுச்சீட்டு என்றால் விஜய் ஏ4 சீட்டு’’ என்று நாம் தமிழர்கள் விஜய்யை கிண்டல் செய்துவரும் நிலையில் சாட்டை துரைமுருகன், ‘’ அம்பேத்கரை கொள்கைத் தலைவராக ஏற்ற விஜய், கொள்கையைக் கூட […]
கிறிஸ்தவக் கைக்கூலியா விஜய்..? மாமாக்களை அம்பலப்படுத்தும் பா.ஜ.க.

ஜோசப் என்ற விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது கிறிஸ்தவ மக்களை ஒருங்கிணைத்து இந்துக்களுக்கு சிக்கல் ஏற்படுத்தும் முயற்சி என்று பா.ஜ.க. ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், இது பொய்யான குற்றசாட்டு என்று விஜய் பக்கத்திலிருந்து ஒரு மறுப்பு கூட வரவில்லை என்பது தான் அவரது ரசிகர்களையே குழப்பத்துக்கு ஆளாக்கியுள்ளது. பா.ஜ.க. ஆதரவாளரான மாரிதாஸ், ‘’விஜய் குடும்பம் Jesuit அமைப்பை தமிழகத்தில் கட்டுப்படுத்துகிறது என்பது உண்மை, விஜய் மாமாக்கள் 1992களில் லயோலா கல்லூரி நிர்வாகத்தில் பணத்தை […]
சீமானை கிழித்து தொங்க விட்ட பிரேமலதா விஜயகாந்த்!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சரமாரியாக தாக்கி பேசியுள்ளார். அவர் பேசும்போது, சீமான் திடீரென்று அந்நியனாகவும், திடீரென்று அம்பியாகவும் மாறுவார். இதற்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. ஏன் முதலில்தம்பி என்று சொன்னார்? பிறகு ஏன் லாரியில் அடிபட்டு சாகவேண்டும் என்று சொல்கிறார்? எல்லாவற்றுக்கும் அவர்தான் பதில் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரே நிலைப்பாடு இருக்க வேண்டும். கடவுள் எல்லோருக்கும் பேசும் சக்தியை […]
3 மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி மாற்றம்!

கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு மூலம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:& * கேரளா, பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * அதன்படி 3 மாநிலங்களில் 14 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * மேற்கண்ட 3 மாநிலங்களில் […]
கஸ்தூரியின் வாய்க் கொழுப்புக்குக் கொதிக்கும் தெலுங்கர்கள்… திராவிடியா தேசிடியா பஞ்சாயத்து

’மன்னர்களின் அந்தப்புரப் பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று நடிகை கஸ்தூரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கஸ்தூரிக்கு எதிராக தெலுங்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், நீதிமன்றத்துக்கும் இழுக்கிறார்கள். சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும் பிசிஆர் சட்டம் போல பிராமணர்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டம் கொண்டு வர வலியுறுத்தியும் சென்னை, ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகை கஸ்தூரி, ‘’தெரியாமத்தான் கேட்கிறேன்.. 300 […]
பரந்தூர் போராட்டக்காரர்களை சந்திப்பாரா விஜய்..? சீமான் கட்சியினர் இரட்டை சவால்

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள விஜய்க்கு, எங்க தலைவர் சீமான் போன்று நேரடியாக பரந்தூருக்குப் போய் போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தர முடியுமா, செய்தியாளர்களை சந்திக்க முடியுமா என்று சவால் விட்டிருக்கிறார்கள் நாம் தமிழர்கள். அதோடு, பரந்தூருக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு குலசேகரபட்டினத்துக்கு ஆதரவு தருவது என்ன லாஜிக் என்று கலாய்க்கிறார்கள். விஜய் அரசியல் கொள்கைகள் அறிவித்ததும் சீமான், ‘’ஒண்ணு அந்தப் பக்கம் நில்லு இல்லைன்னா இந்தப் பக்கம் நில்லு. நடுவுல நின்னா […]
சீமானுக்காக கொள்கையை மாற்றிக்கொண்ட விஜய்..? பனையூர் கூட்டத்தில் பரபரப்பு

திராவிடமும் தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறிய நடிகர் விஜய் இன்று எங்களுடைய கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதி என்று மாற்றி இருக்கிறார். இதனை சீமானுக்குக் கிடைத்த வெற்றி என்று நாம் தமிழர் கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது நடந்து முடிந்த முதல் மாநாடு மற்றும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்றவை குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுல்ளன. […]
சண்டையை ஆரம்பித்தது சீமானா… விஜய்யா..? முடிக்கப் போவது யார்..? யாருக்கு லாபம்?

நடிகர் விஜய் முதல் மேடையில் திராவிடமும் தேசியமும் இரண்டு கண்கள் என்று சொன்னதையடுத்தே சீமானுக்கும் விஜய்க்கும் மோதல் ஆரம்பம் என்று பலரும் கூறும் நிலையில், அதற்கு முன்னரே இரண்டு பேருக்கும் மோதல் ஆரம்பித்துவிட்டது என்று ஆதாரங்களை அள்ளிப் போடுகிறார்கள். சீமான் தரப்பினர், ‘’விஜய் கட்சி ஆரம்பிக்கு முன்னரே அன்போடு கூட்டணிக்கு அழைத்தவர் சீமான். இக்கட்டான சூழ்நிலைகளில் விஜய்க்காக குரல் கொடுத்து நின்றவர் சீமான். அது அவரது பேரன்பு. ஆனால் தனது முதல் கொள்கைப் பிரகடன மாநாட்டில் திராவிடமும் […]

