News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து இன்று வெளியேற்றம்..? மாலையில் கிளைமாக்ஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு (விஜயோடு) மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் தலைவர் திருமாவளவன் சொன்னார்’ என்று ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக ஒரு கடுமையான வாதத்தை முன்வைத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.வான எஸ்.எஸ். பாலாஜி இன்று, ‘’துடுப்பு போடாமல் படகில் கேளிக்கைக்காக அமர்ந்து இருப்பவனால் மட்டுமே படகை […]

விஜய் தான் முக்கியமா..? ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமா கேள்வி

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. விஜய் கலந்துகொள்ளும் நிகழ்வை திருமாவளவன் புறக்கணித்திருக்கும் நிலையில், அதற்காக ஒரு நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறார். இது அரசியல் சூழ்ச்சி என்று புரிந்து விலகியிருப்பதாகக் கூறியிருப்பவர், என்னை விட விஜய் முக்கியமா என்று விகடன் நிறுவனத்தாருக்கும் ஆதவ் அர்ஜுனாவுக்கும் கேள்வி எழுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையில், ‘’புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விகடன் பதிப்பகம் வெளியிடும் நூல் இன்று சென்னையில் வெளியிடப்படுகிறது. முப்பத்தாறு பேரின் கட்டுரைகள் தொகுக்கப் பெற்று இந்நூல் வெளிவருகிறது. இதில் […]

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை !

ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது . இங்கு பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச்செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தலிபான் அரசு விதித்துள்ளது.   இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.   அவர் […]

டிசம்பரில் இன்னும் மூணு புயல் வர வாய்ப்பு இருக்குதாம்… முன்னெச்சரிக்கை கொடுக்கும் வெதர்மேன்

டெல்டே வெதர்மேன் ஹேமச்சந்தர் அவ்வப்போது புயல் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடுபவர். சமீபத்திய ஃபெஞ்சல் புயல் சென்னையை விட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சிக்குப் போய்விட்டது. அதனால் சென்னை மக்கல் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். இன்னமும் புயல் அபாயம் நீங்கவில்லை என்று டிசம்பர் மாத கணிப்புகள் வெளியிட்டுள்ளார். அவரது கணிப்புப் படி, ‘’டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் இயல்பை விட மிக அதிக மழை பதிவாக கூடும். இயல்பிற்கு மிஞ்சிய (Large excess rains) மழை பெய்வதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார். […]

தமிழிசை கைது.. அண்ணாமலை எங்கேப்பா..? மோடியால் இந்துக்களை காப்பாற்ற முடியலையா.?

வங்கதேச நாட்டில், ஹிந்து மத மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் வங்கதேச அரசைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிப்பு செய்திருந்தது. இதற்கு காவல் துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போராட்டம் நடத்திய பல தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கம் போல் அண்ணாமலை இந்த போராட்டத்திலும் கலந்துகொள்ளாமல் எஸ்கேப் ஆகி கைதில் இருந்து தப்பியிருக்கிறார். இது குறித்து இன்று அண்ணாமலை, ‘’வங்க தேசத்தில் ஹிந்து […]

குற்றப் பட்டியலில் சீமான் கட்சி.  வருண்குமாருக்கு சவால் விடும் தம்பிகள்

பிரதமர் மோடி தொடங்கிவைத்த 5வது தேசிய  ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் சீமானின் நாம் தமிழர் கட்சியை பிரிவினைவாதம் தூண்டும் கட்சி என்று திருச்சி எஸ்.பி. பேசியிருக்கும் விவகாரம் தம்பிகளை சூடேற்றியுள்ளது. போலீஸ் சட்டையைக் கழட்டிட்டு சண்டைக்கு வாங்க என்று மல்லுக்கட்டுகிறார்கள். சண்டிகரில் நடந்த கூட்டத்தில் பேசிய திருச்சி SP வருண்குமார், “தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி என்றொரு அமைப்பு இருக்கிறது. தொடர்ந்து பிரிவினைவாதம் பேசக்கூடிய ஒரு கட்சியாக இருக்கிறது. பொதுமக்களை தொடர்ந்து ஆபாசமாக வக்கிரமாக பேசக்கூடிய […]

பெஞ்சல் புயல்: உயிரிழந்த மின் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பெஞ்சல் புயல் கோரதாண்டவம் ஆடிய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய […]

நூலிழையில் உயிர் தப்பிய பஞ்சாப் துணை முதலமைச்சர்! பரபரப்பு தகவல்கள்!

பஞ்சாப் துணை முதலமைச்சர் சுக்பீர்சிங் பாதலை மர்ம நபர் ஒருவர் பொற்கோவிலில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் பொற்கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மாநிலத்தின் துணை முதலமைச்சரும், சிரோமணி அகாலி தள தலைவருமான சுக்பீர்சிங் பாதல், சீக்கிய மதம் தமக்கு அளித்த தண்டனையை நிறைவேற்றும் வகையில் ஈட்டியுடன் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை […]

லண்டனில் இது தான் படித்தாரா அண்ணாமலை..? பொன்முடி சேறு சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன..?

மக்களை தி.மு.க.வினர் இனிமேலும் ஏமாற்ற முடியாது. ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்துவிட்டார்கள் என்பதற்கு உதாரணமே அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட சம்பவமே சாட்சி என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. மீது கடும் தாக்குதல் கொடுத்தார். உடனடியாக பா.ஜ.க.வினர் பலரும், ‘’அமைச்சர் காரில் இருந்தபடியே ஆய்வு மேற்கொண்டதால் கோபமான மக்கள் பொன்முடி மீது சேறு வீசினார்கள் என்று தொடர்ந்து எழுதினார்கள். மேலும், கோபமாக இருக்கும் மக்கள் பொன்முடியின் ஃப்ளக்ஸ்களை கிழித்து எறிவதாகவும் எழுதியிருந்தார்கள். இவை […]

மாமன்னர் விஜய் பனையூர் மாளிகையில் தானம்… அடுத்து ஸ்விக்கி மூலம் நலத்திட்ட உதவிகள்..?

புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடரில் மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட இடத்துக்குச் சென்று ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகள் செய்வது தான் மனிதாபிமான அரசியல். ஆனால், புதிதாக அரசியல் களத்திற்கு வந்திருக்கும் நடிகர் விஜய் புத்தம் புது ஸ்டைலில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை பனையூர் இல்லத்துக்கு வரவழைத்து மழை நிவாரண உதவிகளை வழங்குகியது கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அதோடு நடிகர் விஜய், ‘’உங்கள இடத்திற்கு வந்தால்..இப்படி சகஜமாக அமர்ந்து […]