தமிழக அரசு எப்படி சமூக நீதி பற்றி பேச முடியும்? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி!

ஆளுநர் ஆர்.என்.வி. தமிழக அரசை மீண்டும் வெளிப்படையாக விமர்சனம் செய்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு சட்ட மசோதாக்களை காலம் தாழ்த்துவதில் தொடங்கி, தமிழ்நாடு, தமிழகம் என்று அழைக்கும் சர்ச்சை என பல்வேறு எதிர்மறை எண்ணங்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். எனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக […]
காணொளியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில்பாலாஜி! காவல் 7வது முறையாக நீட்டிப்பு!

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். செந்தில்பாலாஜி மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் […]
அவசரமாக கூட்டப்படும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்! முக்கிய பின்னணி!

கர்நாடகாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் இன்று அவசர அவசரமாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். அதன்படி கடந்த 26ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று (செப்.29) கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்தால் அம்மாநிலமே ஸ்தம்பித்து போயுள்ளது. […]
விபத்தில் உயிரிழந்த ரசிகர்! குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் சொன்ன சூர்யா!

விபத்தில் சிக்கி உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நடிகர் சூர்யாவுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 24ம் தேதி எண்ணூரைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக […]
அ.தி.மு.க.வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்! எடப்பாடி பழனிசாமி அறிக்கை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம், திருச்சியில் சீனிவாசன், பெரம்பலூரில் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தில் ராம.ராமநாதன், தஞ்சாவூர் மத்திய மாவட்டத்தில் சரவணன் ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கட்சியின் நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திண்டுக்கல் ஆகியவை பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர்கள் நியமனம் […]
கொரோனாவை விட 7 மடங்கு வீரியம்! 5 கோடி பேர் உயிரிழக்க நேரிடும்! எச்சரிக்கை பதிவு!

கொரோனா வைரசை விட 7 மடங்கு வீரியமிக்க ‘எக்ஸ்’ என்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில் 5 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 70 லட்சம் பேரை பலி வாங்கியது. கொரோனா தொற்று காரணமாக மக்கள் தங்களின் உயிரை இழந்தும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அவதிப்பட்டனர். கொரோனா தொற்று ஓய்ந்து […]
லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து! முக்கிய பின்னணி!

நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு இவ்விழா செப்.30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய்தத், கவுதம்வாசுதேவ் […]
ரஜினிகாந்த் -ராகவா லாரன்ஸ் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

சந்திரமுகி-2 படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆஸ்தான குருவான நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நாளை மறுநாள் (செப்.28) சந்திரமுகி-2 வெளியாக உள்ளது. பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது பி.வாசுவின் 65வது படமாகும். இத்திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் […]
அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு முக்கிய எச்சரிக்கை! பின்னணி தகவல்கள்!!

அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி முறிவைத் தொடர்ந்து முதல் முறையாக அ.தி.மு.க. தலைமை அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று (செப்.25) மாலை 3.45 மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதன்படி கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி நடத்தப்பட்ட கூட்டத்தில் […]
அ.தி.மு.க.& பா.ஜ.க. கூட்டணி முறிவு! அமைச்சர் துரைமுருகன் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் இன்று நிருபர்களிடம் காவிரி விவகாரம் குறித்தும் பா.ஜ.க.& அ.தி.மு.க. கூட்டணி முறிவு குறித்தும் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடத்த ஆரம்பித்தால் உச்சநீதிமன்றத்தில் தனி அதிகாரம் என்னவாகும் என்பதை கர்நாடக அரசு சிந்திக்க வேண்டும். அதேபோல் இந்த விவகாரத்தை எப்படி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் […]

