பெங்களூருவில் 144 தடை உத்தரவு! விஸ்வரூபம் எடுக்கும் காவிரி விவகாரம்!

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு& கர்நாடகம் இடையே பலத்த மோதல் நிலவி வருகிறது. தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 18ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை கண்டுகொள்ளாத கர்நாடக அரசு, தங்களிடம் […]
நான் உண்மையாகவே ஜெயலலிதாவின் மகள்! யார் இந்த ஜெயலட்சுமி!

மறைந்த ஜெயலலிதா எனது அம்மா என்று ஜெயலட்சுமி என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதோடு புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளேன் என்று பகிரங்கமாக தெரிவித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மறைந்த அ.தி.மு.க.முதல்வர் ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் தன்னை செல்வி.ஜெயலலிதா என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். இருப்பினும் தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கப்பட்டார். திரைத்துறையைத் தாண்டி தனி ஒரு பெண்ணாக அ.தி.மு.க.வை கட்டுக்கோப்புடன் கண் அசைவில் கட்டிவைத்திருந்த பெருமை என்றென்றுமே ஜெயலலிதாவையே சாரும். […]
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி தொடருமா? இன்று முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!

பா.ஜ.க.வுடனான கூட்டணி தொடருமா? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிக்க உள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மறைந்த தலைவர்களான அண்ணாதுரை, ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர்ராஜூ உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து தக்க பதிலடி கொடுத்தனர். இதில் ஜெயக்குமார் மட்டும் கொதித்தெழுந்து இனி […]
மறைந்த ராமஜெயத்தின் 62வது பிறந்தநாள் இன்று! கொலை வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழகத்தையே உலுக்கிய அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் பிறந்தநாள் இன்று. அவரது மர்ம கொலை குறித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத ராமஜெயத்தின் கொலை வழக்கு கடந்த வந்த பாதை குறித்தும் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 2012ம் ஆண்டு திமுக முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். நடைபயிற்சி மேற்கொண்டிருந்த காலை நேரத்தில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடல் திருவளர்சோலை அருகே கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை […]
சபாநாயகர் அப்பாவு – அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! பின்னணி தகவல்கள்!

துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாபுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர். வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி சட்டசமன்ற கூட உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எல்.ஏ.க்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என்று […]
திருப்பதி பிரம்மோற்சவம்! கருட சேவையில் சமர்ப்பிக்கப்பட்ட திருக்குடைகள்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தின் கருட சேவையின் போது உற்சவமூர்த்திகளுக்கு அலங்காரம் செய்ய சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற குடைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் போது சென்னையில் இருந்து புறப்படும் குடைகள் கருட […]
சென்னை அண்ணாசாலையில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி! அதிர்ச்சி பின்னணி!

தனக்கு வேலை ஒதுக்கப்படாததால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் […]
4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் (செப்.21) மற்றும் நாளையும் (செப்.22) ஆகிய 2 நாட்களில் முதலமைச்சர் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் […]
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

தமிழகம் முழுவதும் மொத்தம் 40 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் சப்ளை செய்து வரும் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய மொத்தம் 40 இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னர் சென்னை உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய அதே இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. […]
திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்நபன திருமஞ்சனம்! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு பல்வேறு அலங்கார, ஆராதனைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இதனை காண ஒவ்வொரு நாளும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்ப சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்காரம் பக்தர்களை பரவசப்படுத்தியது. சுவாமிகளின் அலங்காரத்திற்கு தேவையான மாலைகள், கிரீடம் மற்றும் உலர் பழங்கள், சந்தனம், மஞ்சள், உலர்மலர்களால் செய்யப்பட்ட மாலைகளை […]

