News

அண்ணாமலை அரசியல் இயக்கம் ஆரம்பம்…. ரஜினிகாந்த் ஆதரவு..?

Follow Us

அமித்ஷா- சந்திரபாபு நாயுடு மகன் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு தற்போது ராஜமஹேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தெலுங்கு தேசம் கட்சியின் […]

16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் திடீர் மாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 16 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   1. சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த கே.வன்னியபெருமாள் ஐ.பி.எஸ்., சிவில்பாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை கமாண்டன்ட்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   2.காவல் பயிற்சி கல்லூரியின் ஐ.ஜி.யாக பணியாற்றிவந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐ.பி.எஸ்., சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   3. சீருடை பணியாளர் தேர்வாணையத்துடைய ஐ.ஜி.யாக இருந்த […]

செந்தில் பாலாஜி ஜாமீன்? அமலாக்கத்துறை பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடுத்த ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அந்தவேளையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை […]

‘லியோ’ சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இம்மாதம் 19ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தான போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் […]

முதலமைச்சர் ஏமாற்றம் அளித்துவிட்டார்! டி.டி.வி. தினகரன் வேதனை!

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தீர்மானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தவித உத்தரவாதமும் அளிக்காதது ஏமாற்றத்தை தருவதாக அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளையொட்டி 20 இஸ்லாமியர்கள் உட்பட 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்விடுதலை […]

பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு! முக்கிய பின்னணி!

தமிழக சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டத்தொடரில் இருந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்தார்.   தமிழக சட்டப்பேரவை இன்று 3வது நாளாக கூடியது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.   அப்போது அவர் பேசும்போது, ‘‘துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தை மரபை மாற்ற வேண்டாம். ஏற்கனவே இது […]

பிணவறையில் மூட்டை மூட்டையாக பணம்! சிக்கலில் ஜெகத்ரட்சகன்!

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய போது அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி பிணவறையில் மூட்டை மூடையாக பணம் கைப்பற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய வீடு, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி என 70க்கும் மேற்ப்டட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.  இந்த சோதனையின் போது பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. மேலும் கணக்கில் வராத ரூ.4 […]

பாலின, சாதி ரீதியாக தாக்கப்பட்டேன்! பெண் மந்திரி ராஜினாமாவில் பகீர் தகவல்கள்!

புதுச்சேரியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்து வந்த சந்திரபிரியங்கா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல்வேறு பகீர் காரணங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரியில் சந்திர பிரியங்கா என்ற பெண் அமைச்சர் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்துள்ள நிலையில், தனது ராஜினாமா கடிதத்தில் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.   அதில், ‘‘என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கி உள்ள நிலையில் நான் இந்த கடிதத்தினை எழுதுகிறேன். […]

அக்.15ல் தேர்தல் அறிக்கை வெளியீடு! பரபரப்பான தெலுங்கானா!

தெலுங்கானாவில் வருகிற அக்டோபர் 15ம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடும் சந்திரசேகரராவ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதால் அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று நேற்று (அக்.9) இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் அறிவித்திருந்தார்.   மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 7ம் தேதி தொடங்கி 30ம் தேதி […]

குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட செவிலியர்கள்! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் இன்று காலை குண்டுகட்டாக போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையிடல் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்ப புதிய நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவது, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த 500 செவிலியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை டி.எம்.எஸ். […]