300 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்து! 36 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த கோர விபத்தில் 36 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தின் அசார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென்று தனது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அங்கிருந்த 300 அடி பள்ளத்தில் பயணிகளுடன் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 36 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் […]
தியாகி சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதை! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மறைந்த தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா தனது 102வது வயதில் இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்ததால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சங்கரய்யாவின் மறைவு செய்து கேட்டு அதிர்ச்சியடைந்த அனைத்து […]
இந்தியா- நியூசிலாந்து அணி இன்று மோதல்! மும்பைக்கு சென்ற ரஜினிகாந்த்!

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டத்தை பார்க்க நடிகர் ரஜினிகாந்த சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் முன்னர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை இன்று மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ள இந்தியா- நியூசிலாந்து அணிக்கு இடையிலான போட்டி முடிவு செய்யும் என்பதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். 13வது ஐ.சி.சி. […]
குழந்தைகள் தினம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய பதிவு!

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான இன்று குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் மீது அவர் கொண்டிருந்த பாசத்தின் பிணைப்பால் ஜவஹர்லால் நேருவை ‘நேரு மாமா’ என்று அன்புடன் அழைத்து வந்தனர். அதன்படி கடந்த 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வந்த குழந்தைகள் தினம், ஜவஹர்லால் நேருவின் மறைவுக்கு பின்னர் நவம்பர் 14ம் தேதி […]
காங்கிரசை காப்பியடிக்கும் பா.ஜ.க.! சொன்னது யார் தெரியுமா?

காங்கிரசின் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. காப்பியடித்துள்ளது. அவர்களுக்கு சொந்தமாக சிந்திக்கும் திறன் இல்லை என்று மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் சாடியுள்ளார். மத்தியபிரதேசத்தில் 2ம்கட்ட தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. மத்தியபிரதேச முன்னாள் முதல்வரான கமல்நாத் அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயலாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாகர் மாவட்டம் ரஹ்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசும்போது, ‘‘முதல்வர் சிவராஜ்சிங் கவுகான் ஒரு நல்ல நடிகராக இருப்பதால் மும்பைக்கு […]
கேப்டன் விஜயகாந்தின் புதிய புகைப்படம்! கண்ணீர்விடும் ரசிகர்கள்!

தீபாவளி பண்டிகையின் போது வெளியிடப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்தின் புகைப்படம் அவரது ரசிகர்களை கண்ணீர் விட்டு அழச்செய்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் என்றாலே கம்பீரம் என்று அர்த்தம். அவரது கணீர் குரலும் மிரட்டும் கண் விழிகளும், முரட்டுத்தனமான உடலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கென்று தனி இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது. கிராமத்துக் கதை என்றாலும், காவல்துறை சார்ந்த திரைப்படங்கள் என்றாலும் சரி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் முதல் சாய்சாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த்தான். குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் அவர் அடித்து உதைக்கும் […]
மீண்டும் ஆட்சி அமைந்தால்…. ம.பி.யில் பா.ஜ.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கை!

மத்தியபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியமைந்தால் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை பா.ஜ.க. முன்வைத்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் வருகிற 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஆளும் பா.ஜ.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தேர்தல் வாக்குறுதிகளை மிகவும் ஸ்ரத்தை எடுத்து தயார் செய்து மக்கள் மத்தியில் ஆதரவை கேட்டு வருகின்றன. அந்த வகையில் மத்தியபிரதேசத்தில் […]
மக்களவை தேர்தல்: சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை!

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாளை சென்னையில் தென் மாநில தேர்தல் அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். வருகிற 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நாளை காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழகத்தின் தலைமை […]
சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை! பரபரப்பு தகவல்கள்!

சென்னையில் ஒரே நேரத்தில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை மற்றும் பெரும்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கிடைத்த முதல்கட்ட தகவலின்படி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை […]
தொடரும் ஐ.டி.சோதனை! அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் எவ்வளவு கிடைத்தது தெரியுமா?

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரம் நிலையில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40 இடங்களில் கடந்த 3ம் தேதி முதல் வருமானவரித்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ஓட்டல்களிலும், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கோவையில் உள்ள […]

