தலைமை செயலாளரை திடீரென்று அழைத்து பேசிய ஆளுநர்! தமிழகத்தில் பரபரப்பு!

தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மாளிகைக்கு அழைத்து திடீர் சந்திப்பு மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையிலான பிரச்சினையை பூதாகரமாக்கியது. இதன் தொடர்ச்சியாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தான் செல்லும் […]
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4வது நாளாக சோதனை!

தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று 4வது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த மாத்தூர் வேலுநகர் பகுதியில் கடந்த 3ம் தேதி வருமானவரித்துறையினர் தி.மு.க. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் சோதனை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன்படி கடந்த 3ம் தேதி காலை தொடங்கிய சோதனையின் போது அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். வருமானவரித்துறை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி […]
தி.நகர் ரெசிடென்சி ஓட்டலில் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை!

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பாகி உள்ளது. தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற செய்தியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலான […]
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய அருணை கல்லூரியில் ஐ.டி.ரெய்டு!

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த மாத்தூர் வேலுநகர் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து கிடைத்துள்ள […]
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

பழம்பெரும் நடிகரான பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா இன்று காலை உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பழம்பெரும் நடிகர் பாலையாவின் மூன்றாவது மகன்தான் ஜூனியர் பாலையா. இவருக்கு வயது 70. ரகு என்ற தனது பெயரை சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று மாற்றிக் கொண்ட இவர் கடந்த 1975ம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கரக்காட்டக்காரன் […]
இலங்கை செல்லும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 3 நாள் சுற்றுப் பயணமாக இன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். அதிலும் குறிப்பாக இலங்கை செல்லும் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளையும் திறந்து வைக்க இருக்கிறார். அரசுமுறை பயணத்துடன் சேர்த்து இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களுக்கும் அவர் […]
இஸ்ரேல்- ஹமாஸ் போர்! இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள்!

உச்சத்தை எட்டியுள்ள இஸ்ரேல் -ஹமாஸ் போர் எதிரொலியாக காஸாவின் இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் (அக்டோபர்) 7ம் தேதி ஆரம்பமான இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையேயான போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என இஸ்ரேல் ராணுவம், காஸாவை தரைமட்டமாக்கிவிட்டது. இதுவரையில் 8,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் உருகுலைந்து போயுள்ள காஸாவில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு […]
ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு! தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளிட்ட 13 மசோதாக்கள் இன்றளவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மசோதாக்கள் குறித்த எந்த நகர்வையும் ஆளுநர் மேற்கொள்ள […]
நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவரா? மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை!

சமீப காலமாக அதிகரித்து வரும் இளம் வயதினரின் மாரடைப்புக்கு காரணம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுதான் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பரவி பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. இருப்பினும் பலர் நோய் தொற்றில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். […]
சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை! தெலுங்கானாவில் பரபரப்பு!

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தெலுங்கு தேசம் கட்சியினர் பின் வாங்கி இருப்பது கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவுடன் இணைவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சமயத்தில் தான் […]

