Share via:
தேர்தலுக்கு இன்னமும் 12 நாட்களே இருக்கும் நிலையில் தி.மு.க.
சார்பில் ஸ்டாலினும் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் மீது ஒருவர்
கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய ஸ்டாலின், ‘கூவத்தூரில் கப்பம்
கட்டி, கட்சியை ஏலம் எடுத்து, தன்னை ஏற்றிவிட்டவர்கள் முதுகில் எல்லாம் குத்திய அரசியல்
அமாவாசைதான் பழனிசாமி. இவர்தான் உழைப்பால் உயர்ந்தவரா? மோடியின் B-Team ஆக, கட்சியை
மொத்தக் குத்தகைக்கு விட்டிருக்கும் பழனிசாமி அவர்கள், தன் வாய்ச்சவடால்களை அவரது கட்சியினரோடு
நிறுத்திக்கொள்ளட்டும். மீண்டும் மோடி பிரதமரானால், தமிழ்நாட்டின் மீது பண்பாட்டுப்
படையெடுப்பு நடக்கும்!’ என்று கூறியது மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியை, ‘அவர் தமிழ்நாட்டின்
விவசாயி அல்ல தமிழ்நாட்டின் விஷம்’ என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி,
‘விஷவாயு எனும் அந்த பட்டம் ஸ்டாலினுக்கே பொருத்தம். வேளாண் மண்டலத்தை பாதுகாக்கிறேன்
என்று சொல்லி விவசாயிகளை ஏமாற்றுகிறார் ஸ்டாலின் என்று எடப்பாடி பழனிசாமி போட்டுத்
தாக்கியிருக்கிறார்.