Share via:
காசா மருத்துவமனைக்கு அடியில் ஹமாஸ் அமைப்பினர் ரகசிய சுரங்கப்பாதை அமைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு இடையில் போர் மூண்டது. போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காசா பகுதியே முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டது. வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் அதிகபட்சமாக 40 சதவீத குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ள நிலையில் 10 நிமிடத்திற்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டது.
காசாவில் பொதுமக்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் கடும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தியது தாங்கள் இல்லை எதிர்தரப்பினர்தான் என்று ஹமாஸ் அமைப்பினரும், இஸ்ரேல் ராணுவமும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பரபரப்பு வீடியோ ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதக்குழுவினர் சுரங்கப்பாதைகளை உருவாக்கி மருத்துவமனை ஒன்றை தங்கள் மறைவிடமாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. அதேபோல் அங்கே இஸ்ரேலின் பிணைக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ள 6 நிமிட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள சுரங்கப்பாதை குண்டு துளைக்காக தரை திறப்புக்கு கீழ் அமைந்துள்ளது. அவை மருத்துவமனையில் தரைகீழ் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக இருப்பதாக வீடியோ பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.