News

Follow Us

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் தி.மு.க. ஆட்சி சொல்லாட்சிஅல்ல செயலாட்சி என்று உடன்பிறப்புகள் கொண்டாடும் தருணத்தில், இதனை பொய் ஆட்சி என்று கடுமையான தாக்குதல் நடத்தியிருக்கிறார் எட்டப்பாடி பழனிசாமி.

அவரது அறிக்கைய்ல், ’நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றார்- நான்காவது முறையாக நீட் தேர்வு நடந்து முடிந்தாயிற்று! சட்டம் ஒழுங்கைக் காப்பேன் என்றார்- கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என சந்திசிரிக்கிறது! போதையற்ற தமிழ்நாடு அமைப்பேன் என்றார்.

 போதைப்பொருள் மாபியா நடத்திவந்ததே அவர் கட்சிக்காரர் ஜாபர் சாதிக் தான் என்று தெரியவந்தது! சமத்துவம் சமூகநீதி காப்போம் என்றார்- வேங்கைவயல் முதல் நாங்குநேரி வரை ஸ்ட் தீண்டாமை சம்பவங்கள் தலைகுனிவை ஏற்படுத்தின.

மாநில உரிமைகள் காக்கப்படும் என்றார். காவிரி-மேகதாது விவகாரங்களில் மாநில உரிமையை தேர்தல் கூட்டணிக்காக கள்ள மவுனம் சாதித்து தாரைவார்த்தார். வாக்குறுதிகள் நிறைவேற்றுவோம் என்றார்- தேர்தல் அறிக்கையை காற்றில் பறக்கவிட்டு, 99% நிறைவேற்றிவிட்டதாக வாய் கூசாமல் பச்சைப்பொய் பேசினார்.  

விடியல் தரப்போகிறேன் என்றீர்கள். உங்கள் மூன்றாண்டு ஆட்சியில், அதாவது விடியா ஆட்சியில், தமிழ்நாடு இருளில் மூழ்கியதே மிச்சம். 3 ஆண்டு காலத்தில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்தது தான் சாதனை’’ என்று கூறியிருக்கிறார்.

அறிக்கை விடுவது மட்டும் போதாது, இதை தமிழகம் முழுக்க மேடை போட்டும் வீட்டுக்கு வீடு நோட்டீஸ் கொடுத்தும் தி.மு.க.வை அம்பலப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் கேட்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link