News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இதுவரை 447 குழந்தைகள் பலி! ஐ.நா. அதிர்ச்சி தகவல்!

காசாவில் இதுவரை 447 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.   இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான மோதல் ஒரு வாரத்தை தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. 3 ஆயிரத்துக்கும் மேல் கொல்லப்பட்டுள்ள நிலையில் காசாவில் கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் காசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. காசாவில் தாக்குதல் நடத்தினால் பிணைக் கைதிகளை […]

2028 ஒலிம்பிக் தொடரில் இணைந்த கிரிக்கெட்! ரசிகர்கள் உற்சாகம்!

2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி என்றால் அது ஒலிம்பிக்தான். இப்போட்டித் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என்பது பல ஆண்டு கோரிக்கையாகவே இருந்து வந்தது. ஆனால் 1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடர் ஒன்றில் மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இருந்து நீக்கிவிட்ட நிலையில் கிட்டத்தட்ட123 ஆண்டுகள் கழித்து தற்போது கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. […]

இஸ்ரேலில் இருந்து 14 தமிழர்கள் சென்னை வருகை! அனைவரையும் மீட்போம்!

இஸ்ரேலில் சிக்கித் தவித்த 14 தமிழர்கள் சென்னை வந்தடைந்துள்ள நிலையில் அனைவரையும் விரைவில் மீட்போம் என்று அமைச்சர்  மா.சுப்பிரமணியன் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.   இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாதிகள் மோதல் சம்பவத்தால் இஸ்ரேலில் தங்கியுள்ள அயல்நாட்டினர் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களை மீட்க அந்தந்த நாட்டு அரசுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.   அதன்படி இந்திய நாட்டின் மத்திய அரசு ‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 212 இந்தியர்களை பத்திரமாக விமானம் மூலம் மீட்டு தாயகம் […]

வடகாசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் வெளியேறுங்கள்! இஸ்ரேல் எச்சரிக்கை!

வடகாசாவில் இருந்து 10 லட்சம் மக்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.   இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி இன்று 7வதுநாளாக நடைபெற்று வருகிறது. மேலும் பல பிணைக்கைதிகளை பிடித்து வைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் ராணுவத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர் தாக்குதலை நடத்தி […]

தாயகம் திரும்பிய 212 இந்தியர்கள்! திகிலூட்டும் இஸ்ரேல் நாட்கள்!

மத்திய அரசின் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கித்தவித்த 212 இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் குறித்த அறிவிப்பை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 7வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் […]

இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள்! Operation Ajay மத்திய அரசு அதிரடி!

இஸ்ரேல்- பாலஸ்தீனம் மோதலுக்கு இடையே சிக்கியுள்ள 18,000 இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.   இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர் இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தி காசா பகுதி தங்களுடைய நாட்டின் எல்லை என்று இஸ்ரேலும், பாலஸ்தீனமும் உரிமை கொண்டாடி வருவதால் பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வருகிறது.   இதைத்தொடர்ந்து 4 முறை போர் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது கடந்த 6 நாட்களாக போர் […]

கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முக்கிய அறிவிப்பு! பின்னணி தகவல்கள்!

இஸ்ரேல்- ஹமாஸ் மோதலால் வேதனையடைந்த கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 5வது நாளாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் 3,600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டிற்கு வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் சென்றவர்களை அந்தந்த நாட்டினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் கூகுள் நிறுவனம் இஸ்ரேல் நாட்டில் ஹைஃபா, டெல் அவிவ் பகுதிகளில் […]

1,000 குழந்தைகளுக்கு இலவசக் கல்வி! ஊபர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

  ஊபர் நிறுவனம் இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் ஓட்டுநர்களுடைய 1,000 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாகக் கொண்டு ஊபர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 70 நாடுகளில் 11 ஆயிரம் நகரங்களில் வாடகைக் கார் சேவையை செய்து வரும் ஊபர் இந்தியாவில் தனது சேவையை தொடங்கி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.   அதனை கொண்டாடும் […]

‘லியோ’ சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு அனுமதி! ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இம்மாதம் 19ம் தேதி உலகளவில் வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தான போது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைத்தொடர்ந்து டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்குமாறு படக்குழு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் […]

முதலிடத்தில் முகேஷ் அம்பானி! பின்னடைவில் அதானி!

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொழில் அதிபர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, கௌதம் அதானியை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். இந்திய பணக்காரர்கள் பட்டியலை ஹுரன் இந்தியா மற்றும் 360 ஒன் வெல்த் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளன. அந்தபட்டியலின் படி ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.8.08 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்த இவரின் […]