சென்னையில் இருந்து திருச்சி வழியாக முதல்வர்

சென்னையில் இருந்து திருச்சி வழியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சை செல்கிறார். பாதுகாப்பு கருதி, முதல்வர் செல்லும் வழித்தடங்களில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டவிரோத விளம்பர பலகை விவகாரம்! தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்!

சட்டவிரோதமாக விளம்பரப் பலகைகளை வைத்திருந்தால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னையில் சாலையின் நடுவே இருந்த விளம்பரப் பலகை விழுந்து இளம்பெண் பலியானார். அதே போல் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை வரவேற்க கொடிகம்பம் அமைத்த சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானான். இதுபோன்ற துயரசம்பவங்களை சுட்டிக்காட்டி, விளம்பர பலகைகளை தடையை மீறி வைக்க அனுமதியளித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா […]
அவதூறு வழக்கு! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரான அண்ணாமலை!

எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக இன்று அண்ணாமலை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தி.மு.க. எம்.பி.யான டி.ஆர்.பாலுவின் பெயர் கடந்த ஏப்ரல் 14ம் தேதி அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் டி.ஆர்.பாலுவின் பெயரை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் அவர் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதனால் அதிர்ச்சியான டி.ஆர்.பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17வது நீதிமன்றத்தில் […]
வெற்றி பெறுவதற்கு முன்பு ஓய்வு கிடையாது! அண்ணாமலை உறுதி!

தமிழ்நாடு பா.ஜ.க. பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, வெற்றி பெறும்வரை ஓய்வு என்பதே கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.5) மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 3ம் தேதி இக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டது. இன்று கூடிய கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை […]
தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்! தாமதமாக வந்த அண்ணாமலை!

தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தாமதமாக வந்தார். இருப்பினும் அதற்கு முன்பாகவே பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் தொடங்கப்பட்டது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொளவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் தெரிவித்தார். அண்ணாமலையின் அவதூறு பேச்சுகளே இந்த கூட்டணி முறிவுக்கு காரணம் என்று பா.ஜ.க. தலைமை கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் பா.ஜ.க. தலைமை அழைப்பின் பேரில் […]
போராட்டம் தற்காலிக வாபஸ்! இடை நிலை ஆசிரியர்கள் அறிவிப்பு!

தமிழக அரசின் அறிவிப்பை ஏற்று கடந்த 8 நாட்களாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் கடந்த 8 நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மற்ற இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு […]
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் அறிவிப்பு!

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து விரைவில் பரிசீலித்து முடிவு செய்து அறிவிக்கபப்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆவின் பால் கொள்முதல் விலயை உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளதாக தற்போது தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அதிக […]
குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள்! பரபரப்பான டி.பி.ஐ. வளாகம்!

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டத்தில் 8வது நாளாக ஈடுபட்டிருந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கக் கோரி இடை நிலை ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து […]
தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐ.டி. ரெய்டு!

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வருமானவரித்துறை அதிகாரிகள் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும், தி.மு.க. முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனின் அடையாறு வீடு வீடு, அலுவலகம், கல்லூரிகள் மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இன்று (அக்.5) அதிகாலை முதல் […]
முதல்வர் குறித்து சர்ச்சை! பொதுக்கூட்டத்தில் மன்னிப்பு கேட்கும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.!

முதலமைச்சர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொதுக்கூட்டம் நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான குமரகுரு கடந்த மாதம் (செப்.) 19ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இதனால் கொதித்தெழுந்த தி.மு.க.வினர் குமரகுருவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து […]

