News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஒரு வருடத்திற்கு 2 இலவச சிலிண்டர்கள்! எங்கே தெரியுமா?

ஒரு வருடத்திற்கு 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தை வருகிற தீபாவளி முதல் தொடங்க உள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.   உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். இம்மாநிலத்தின் தேர்தல் அறிக்கையின் போது பெண்களுக்கு ஒரு வருடத்திற்கு 2 இலவச எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.   இத்திட்டம் தொடர்பான் முன்மொழிவு குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் […]

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ வெளியான முக்கிய அறிவிப்புகள்!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.   தமிழகத்தின் மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிர்வாக பணிகளையும், வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின ஆய்வு செய்து வருகிறார். இதற்கு ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.   அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். நேற்று […]

(18.10.2023)‘லியோ’ காலை 7 மணிக்காட்சி: தமிழக அரசு சொன்ன No

லியோ திரைப்படத்தின் காலை 7 மணிக் காட்சி கிடையாது என்று தமிழக அரசு கைவிரித்ததால் படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   லியோ திரைப்படம் தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. நாளை (அக்.19) லியோ திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இதற்கிடையில் காலை 4 மணி ரசிகர்கள் காட்சிக்கு அனுமதிக்கும்படி உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முதல் தடையை போட்டது.   அதைத்தொடர்ந்து 9 மணி காட்சிக்கு பதிலாக 7 […]

நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்! தி.மு.க.வின் அதிரடி நடவடிக்கை!

நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நீட் தேர்வு மூலமாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்களை எடுத்துவிட்டோம் என்றும் பிளஸ்2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவம் படிக்க முடியவில்லையே என்ற விரக்தியில் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.   எனவே தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று தி.மு.க. […]

மகளிர் உரிமைத் தொகை! கடைசி மேல்முறையீடு எப்போது தெரியுமா?

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்வதற்கான கடைசி தேதி குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் பணம் பெறுவதற்கு 1.63 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த 2 மாதங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிரின் வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் சிலர் […]

சென்னையில் 20 இடங்களில் ஐ.டி.சோதனை! பரபரப்பு தகவல்கள்!

சென்னையில் இன்று அதிகாலை முதல் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   வரி ஏய்ப்பு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குறித்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.   அந்த வகையில் பிரபல மருந்து வணிக நிறுவனமான கவரிலால் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் அதற்கு தொடர்புடைய மற்றும் சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 வாரங்களில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது என்பதால், தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்புகள் எப்போது வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் தீபாவளி போனஸ் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஒப்புதல் அறிவிப்பின்படி ‘சி’ பிரிவு மற்றும் கெசட் ரேங்க் இல்லாத ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் […]

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்! எடப்பாடி பழனிசாமி பயணம்!

அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று (அக்.18) சங்கரன் கோவிலில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.   அ.தி.மு.க.வின் 52வது ஆண்டு விழா நேற்று (அக்.17) தமிழகமெங்கும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் தொண்டர்களுக்கு […]

சார் பதிவாளர் அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்!

புதன்கிழமை (அக்.18) சுபதினமான இன்று பொது மக்கள் வசதிக்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் சுபதினமான புதன்கிழமைகளில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அதனை கருத்தில் கொண்டு அன்றைய தினங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவில் ஆவணப் பதிவு செய்யும் வகையில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.   அதன்படி இன்று (அக்.18) ஐப்பசி மாதத்தின் முதல் தினம் (புதன்கிழமை) என்பதாலும், சுபதினம் என்பதாலும் தமிழகத்தில் உள்ள அனைத்து […]

அ.தி.மு.க.வின் 52 ஆண்டு கால சாதனைப்பயணம்! முழு விவரம் உள்ளே!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தனது 52வது ஆண்டு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்த மாவட்டந்தோறும் அ.தி.மு.க.வினர் தங்கள் மகிழ்ச்சியுடன் சேர்த்து இனிப்புகளையும் பகிர்ந்து வருகின்றனர். சற்று பின்னோக்கி பார்க்கும் போது அ.தி.மு.க. இந்த 52 ஆண்டு காலத்தை எப்படியெல்லாம் கடந்துவந்தது? அதன் ஏற்ற இறக்கங்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு. தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தவர் தான் நடிகரும், […]