தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. திடீர் மரணம்! தொண்டர்கள் அதிர்ச்சி!

தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.வேணு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கே.வேணு தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். அதோடு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கே.வேணு திடீர் உடல்நலக்குறைவு குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கே.வேணு மறைவுக்கு அப்பகுதி […]
சாலையோரம் உணவருந்திய அண்ணாமலை! சிலிர்க்கும் தொண்டர்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் போது நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் காரில் அமர்ந்தபடி அண்ணாமலை உணவு அருந்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இது பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட பகுதிகளான பல்லடம், அவுநாசி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற யாத்திரையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் […]
ராஜஸ்தானில் இன்று பிரியங்கா காந்தி பரப்புரை! தொண்டர்கள் உற்சாகம்!

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்ற உள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. அந்த வகையில் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற […]
ஆயுதபூஜை தொடர் விடுமுறை: தமிழகத்தில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தில் 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் விஜயதசமி மற்றும் ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. சொந்த ஊர்களில் இருந்து படிப்புக்காகவும், வேலைக்காகவும் பல்வேறு ஊர்களில் தங்கியுள்ளவர்கள், விழா மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அப்படிப்பட்ட […]
பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மறைந்த பங்காரு அடிகளாரில் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்திபீட நிறுவனர் பங்காரு அடிகளார் (வயது 82) நேற்று மாலை 5 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் உடல் மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. பங்காரு அடிகளாரின் மறைவு செய்தியை கேட்ட சக்திபீட ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘‘அம்மா… அம்மா’’ என்று கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதோடு அனைத்து மாநிலங்களில் […]
ஒரே நேரத்தில் ஒலித்த லட்சக்கணக்கான செல்போன்கள்! மக்கள் அதிர்ச்சி!

ஒரே நேரத்தில் ஒலித்த லட்சக்கணக்கான செல்போன்கள்! மக்கள் அதிர்ச்சி! லட்சக்கணக்கானவர்களின் செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட செல்போன் சேவைகளை பயன்படுத்துவோர்களின் செல்போன்கள் இன்று காலை 11.27 மணியளவில் எம்ர்ஜென்சி அலர்ட் என்ற பெயரில் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த எச்சரிக்கை ஒலி தன்னுடைய செல்போனில் மட்டும்தான் வருகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்தடுத்த செய்தி என்னவென்றால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களின் செல்போனில் ஒலித்தது. இது குறித்து […]
தெலுங்கானாவில் பா.ஜ.க.வால் எப்படி சமூக நீதி வழங்க முடியும்? -ராகுல்காந்தி

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பீரங்கியாக மாறிய ராகுல்காந்தியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அவரின் பிரசாரத்தை ஆர்வமுடன் கேட்டனர். சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. அந்த வகையில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி மற்றும் […]
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்! பக்தர்கள் அதிர்ச்சி!

செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக இன்று (அக். 19) காலமானார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவி அதன் குருவாக செயல்பட்டு வந்து பக்தர்கள் மத்தியில் பிரபலமானவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. அதோடு மட்டுமல்லாமல் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2019ம் ஆண்டு இந்திய […]
உச்சநீதிமன்றத்திற்கு வெளியே நடந்த விபரீதம்! அதிர்ச்சி தகவல்!

உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தன்பாலின தம்பதி மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்தது. அயல்நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்த சுவடு மறையாத சூழ்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் […]
டி.கே.சிவக்குமாருக்கு வந்த சிக்கல்! அரசியல் களத்தில் பரபரப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமரி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி கர்நாடக துணை முதல்வரான டி.கே.சிவக்குமார் மீது சொத்துக்குவிப்பு வழக்கை சி.பிஐ. பதிவு செய்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த […]

