News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தமிழகத்தில் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்! உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்!

தமிழகத்தில் ஜெகோவா பிரார்த்தனை அரங்குகள் மற்றும் மாநாட்டு மையங்களில் பாதுகாப்பு உறுதி செய்யுமாறு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   கேரளாவில் கடந்த 29ம் தேதி மதக்கூட்டரங்கில் திடீரென்று டிபன் பாக்ஸ் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   அதைத்தொடர்ந்து தமிழக மாநில உளவுத்துறை சார்பில் அனைத்து மாவட்ட காவல்துறை ஆணையர், காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை துணை […]

சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார ஜாமீன் வழங்கிய ஆந்திர நீதிமன்றம்!

சிறையில் இருந்த தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது ஆந்திர நீதிமன்றம். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்தபடியே விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். அந்த கடிதத்தில், சிறையில் இருக்கும் […]

டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் டி.என்.பி.எஃப்.சி. தலைமை அலுவலகத்தில் ஐ.டி. ரெய்டு நடைபெற்று வருகிறது.   சென்னை நந்தனத்தில் டி.என்.பி.எஃப்.சி. (மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்) தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கினறன.   குறைவான வருமானவரி தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும் இந்த வருமானவரி சோதனையில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.   […]

லியோ வெற்றி விழா! ஆன்லைனில் டிக்கெட் விற்பனை!

நடிகர் விஜய்யின் லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் ஆன்லைனில் மிகவும் ஆர்வமாக வாங்கி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனத்துடன் ரூ.500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதைத்தொடர்ந்து லியோ திரைப்படத்திற்கு வெற்றி விழா நடத்த படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான அனுமதியை பெரியமேடு காவல்துறையிடம் கோரியிருந்தனர். வெற்றி விழாவை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கான அனுமதியை காவல்துறை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

பட்டாசுக் கடையில் வெடி விபத்து! திருவாரூரில் பதற்றம்!

திருவாரூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக் கடைகளில் திடீரென்று வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பட்டாசு விற்பனை களைகட்டியுள்ளது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள பட்டாசு விற்பனைக்கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென்று வெடித்தது. பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் […]

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு! தமிழக அரசு அதிரடி!

தமிழக அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் என்னவென்றே தெரியவில்லை ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளிட்ட 13 மசோதாக்கள் இன்றளவும் ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. மசோதாக்கள் குறித்த எந்த  நகர்வையும் ஆளுநர் மேற்கொள்ள […]

கடுமையாக உயர்ந்த வெங்காயத்தின் விலை! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், வெங்காய வரத்து குறைந்துள்ளதாலும் தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை கடும் உச்சத்தைத் தொட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மெல்ல மெல்ல தக்காளியின் விற்பனை விலை இயல்புநிலைக்கு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு […]

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு! ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை வருகிற நவம்பர் மாதம் 6ம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் […]

பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமிக்கு அவமரியாதை! தொண்டர்கள் அதிர்ச்சி!

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக சென்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சிலர் அவமரியாதையாக நடந்து கொண்ட சம்பவம் தொண்டர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்தராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சித் தலைவர்களும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் முத்துராமலிங்கத் தேவர் […]

சென்னை கடற்கரை- தாம்பரம் மின்சார ரெயில்கள் ரத்து- தென்னக ரெயில்வே!

சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரெயில்கள் காலை […]