News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது யார்? டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல்!

தாஜ்மகாலை உண்மையில் கட்டியது ஷாஜகான் இல்லை, ராஜா மான்சிங்கின் அரண்மனையைத்தான் அவர் சீரமைத்துள்ளார் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். கட்டிடக்கலைக்கே பெருமை, உலக அதிசயம், காதலர்களின் நினைவுச்சின்னம் என்று போற்றப்பட்டு வரும் தாஜ்மால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த கட்டிடம் முழுவதும் பளிங்கு கற்களால் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. முகாலய மன்னன் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டினார் […]

தி.நகர் ரெசிடென்சி ஓட்டலில் ஐ.டி. ரெய்டு! பரபரப்பான சென்னை!

சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ரெசிடென்சி ஓட்டலில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் சுமார் 100க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் ஒட்டுமொத்த தமிழகமே பரபரப்பாகி உள்ளது. தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற செய்தியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு முக்கிய தகவல் கிடைத்துள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலான […]

உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நீதிபதி! என்ன செய்தார் தெரியுமா?

உச்சநீதிமன்ற நீதிபதி தன்னை ‘மை லார்டு’ என்று அழைக்காதீர்கள் என மூத்த வழக்கறிஞரை கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றங்களில் வாதாடும் வழக்கறிஞர்கள், நீதிபதிகளை பொதுவாக ‘மை லார்டு’ அல்லது ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று அழைப்பதை நாம் பார்த்திருப்போம். இது ஆங்கிலேயர் காலத்தைய வழக்கம் என்பதால், இதனை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறி இதற்கு தடை விதித்து கடந்த 2006ம் ஆண்டு இந்திய பார் கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் கொண்டு வரப்பட்ட […]

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை கொட்டி வருகிறது. அத்துடன் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]

தீபாவளி Scam: பல கோடி ரூபாய் மோசடி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பரவி வரும் போலி விளம்பரங்களை நம்பி மக்கள் பல கோடி ரூபாய் அளவுக்கு பணத்தை இழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் தற்போது ஆன்லைன் மூலம் பல பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதிலும் பண்டிகை காலம் என்றால், ஆன்லைன் விளம்பரங்கள் அதிகளவில் குவிந்து விடுகிறது. பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுடன் சேர்த்து ஒரு சில அங்கீகரிக்கப்படாத மோசடி நிறுவனங்களும் தங்களது கவர்ச்சிகரமான சலுகை விளம்பரங்களை வெளியிடுகிறது. […]

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய அருணை கல்லூரியில் ஐ.டி.ரெய்டு!

அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அடுத்த  மாத்தூர் வேலுநகர்  பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுக்கு தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் அருணை பொறியியல் கல்லூரி மற்றும் அமைச்சரின் இல்லம் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இது தி.மு.க.வினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து கிடைத்துள்ள […]

தீபாவளிக்கு முன்பாகவே கலைஞர் உரிமைத் தொகை? குடும்பத்தலைவிகள் எதிர்பார்ப்பு!

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைத்துவிடும் என்று குடும்பத் தலைவிகள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.  இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் 1.06 கோடி பேர் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2 மாதங்களாக அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பித்தவர்களில் 56.50 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் மேல்முறையீடு […]

அரசு பள்ளிகளில் நாள்தோறும் நீட் பயிற்சி வகுப்புகள்! முக்கிய அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீட் தேர்வு, ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.   மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஜே.இ.இ. எனும் பயிற்சியும் தேவைப்படுகிறது. ஏழை, எளிய மாணவர்களால் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற முடியாமல் உள்ளதால், தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ரத்து செய்ய வேண்டும் கோரிக்கை வைத்து […]

சென்னையில் கண்டெய்னர் லாரிகளுக்கு 3 நாட்கள் தடை! எப்போது தெரியுமா?

தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சென்னைக்குள் வர 3 நாட்களுக்கு கண்டெய்னர் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 12ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன்படி கோயம்பேடு பேருந்து நிலையம், கே.கே.நகர், தாம்பரம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது […]

விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் அண்ணாமலை! புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்!

புதியவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது விஜய் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று இலங்கையில் நடைபெற உள்ள மலையகத் தமிழர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை செல்கிறார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்போது, தோழர் சங்கரய்யாவுக்கு கவுரவ பட்டம் கொடுக்க வேண்டும் என்பது தன்னுடைய கருத்து என்று தெரிவித்ததுடன், […]